திருப்பதியில் நாளை மறுநாள் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதியிலிருந்து திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலிலிருந்து 11 திருக்குடைகள் ஏழுமலையான் திருப்பதிக்கு இன்று மாலை எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என கோஷம் போட்டு பரவசத்தால் திருக்குடைகளை ஏந்திக் கொண்டு சென்றனர்.
இந்த திருக்குடைகள் நாளை திருப்பதியை சென்றடையும் என பக்தர்கள் தெரிவித்தனர். அனைத்து திருக்குடைகளும் கருடோத்சவம் அன்று திருமலையில் உலா வரும் எனவும் அவர்கள் கூறினார்கள்.