ETV Bharat / city

திமுகவிடம் பணம் வாங்கி 'சார்பட்டா பரம்பரை' எடுக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் கடும்தாக்கு

author img

By

Published : Aug 16, 2021, 7:35 PM IST

திமுகவிடம் பணம் வாங்கி 'சார்பட்டா பரம்பரை' படம் எடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரை அவமதிக்கும் செயலை அதிமுக ஒருபோதும் ஏற்காது. குத்துச்சண்டைக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அண்ணா தொழிற்சங்கத்தின் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், சென்னை வேளச்சேரியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் இன்று (ஆக. 16) நடைபெற்றது.

தொழிற்சங்கத்தின் தெற்கு மண்டலச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும், 17 பணிமனைகளின் கிளை நிர்வாகிகள் பொறுப்புகளுக்கும், ரூ. 500-லிருந்து ரூ. 5,000 வரையிலான கட்டணத்தைச் செலுத்தி வேட்பு மனுவை உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர். ஆகஸ்ட் 22ஆம் தேதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

அரசு மறைக்க முயல்கிறது

இந்நிலையில், வேட்புமனு தாக்கலை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "எப்போதும் சமுதாயத் தலைவர்களை மதிக்கும் இயக்கம் அதிமுக தான். சுதந்திரத்திற்காக பல இன்னல்களை அனுபவித்தவர், மாவீரன் அழகு முத்துக்கோன்.

அவருக்கு அதிமுக சார்பில் எழும்பூரில் கம்பீரச் சிலை வடிவமைக்கப்பட்டது. அப்போது கண்ணப்பனும் அமைச்சராக இருந்தார். அழகு முத்துக்கோன் வீரத்தை திமுக அரசு மறைக்க முயல்கிறது.

நேற்று (ஆக. 15) வெளியிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில், அழகு முத்துக்கோன் பெயர் இடம்பெறாதது, யாதவர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.

'திமுகவினர் இல்லத்தரசிகளுக்கு நாமம்தான் போடுவார்கள்'

இதையறிந்து திமுக அமைச்சரவையில் உள்ள யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் ஆகியோர் கோபத்தில் ராஜினாமா செய்வார்களா..? அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் நிதிநிலை சீரமைந்த பிறகு தரப்படும் என்று முதலமைச்சர் கூறுவது, போகாத ஊருக்கு வழிதேடும் கருத்து.

மத்திய அரசு ஏற்றிக்கொடுத்த அகவிலைப்படியை மாநில அரசு ஏற்றித் தரவில்லை. அதிமுகவினர் உள்ளத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று பேச மாட்டோம். திமுகவினர் இல்லத்தரசி, அரசு ஊழியர்களுக்கு நாமம்தான் போடுவார்கள்.

'மலைக் கள்ளன்' படத்தில் எம்ஜிஆர் பாடிய 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..' என்ற பாடல் திமுகவிற்குப் பொருந்தும். ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நிதியை அதிகரிப்பது இயல்பானதுதான்.

அதிமுக நிலைப்பாடு

வேளாண் தனி நிதி அறிக்கை வரவேற்கக் கூடியதுதான். ஆனால், கூட்டுப்பண்ணை போன்றவற்றை ஏற்கெனவே நாங்கள் அறிவித்துவிட்டோம்.

அதிமுக, பாமகவின் தோழமைத் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியை ராமதாஸ் தற்போதுவரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தலில் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, அடுத்தவர்மீது பழிபோட்டுவிட்டு 'The great escape' என்று சொல்லும் விதமாக திமுக தற்போது நடந்து கொண்டுள்ளது. அர்ச்சகர் ஆவோர் அகம விதிகளை முறையாக கற்க வேண்டும் என்பதே அதிமுக நிலைப்பாடு.

அசல் ஹீரோ எம்ஜிஆர்

'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்தது தொடர்பாக ஏற்கெனவே கண்டனம் தெரிவித்தோம். தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளோம்.

சார்பட்டா பரம்பரையில் குறிப்பிட்ட சில காட்சிகளில் உண்மைக்கு மாறான விஷயங்கள் உள்நோக்கோடு இருக்கிறது. எம்ஜிஆர் Sports man ஆவார். தண்டால், சிலம்பம், கோல் சண்டை செய்வார். திரைப்படத்திலும், அரசியலிலும் அசல் ஹீரோ, எம்ஜிஆர்தான்.

முகமது அலியை அழைத்துவந்து விழா நடத்தி குத்துச்சண்டையை ஊக்குவித்தவர், எம்ஜிஆர். சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு உடலைத் திடமாக வைத்துக்கொள்வது தொடர்பாக அவர் அறிவுரை கூறியுள்ளார்.

'சார்பட்டா பரம்பரை'

வளரும் இளைஞர்கள் மத்தியில் திமுக தான் விளையாட்டை ஊக்குவிப்பதாகக் காட்டியுள்ளனர். இந்தப் படத்தை எடுப்பதற்காக திமுகவிடம் பணம் வாங்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்தப் படம் மூலம் அரசியலை புகுத்தி ஆதாயம் தேட சதிசெய்துள்ளனர்.

முதல் கையெழுத்து மூலம் பூரண மதுவிலக்கை கொண்டுவந்தவர், எம்ஜிஆர். சாராயத்தைக் கொண்டுவந்து குடிக்க கற்றுக்கொடுத்தது திமுகதான். படத்தில் திமுகவினரை உத்தமர்கள்போல காட்டியுள்ளனர்.

'சார்பட்டா பரம்பரை' திமுகவின் பரம்பரை படம். ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம். மிசாவில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டாரா? என்பது குறித்த உண்மை கதை எல்லோருக்கும் தெரியும்.

எம்ஜிஆரை அவமதிக்கும் செயலை அதிமுக ஒருபோதும் ஏற்காது. குத்துச்சண்டைக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது. வளர்ந்துவரும் இயக்குநர்களை மதிக்கிறோம்.

அவர்களை ஊக்கப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால், கண்டனம் தெரிவித்த பிறகும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கவில்லை" என்று பேசினார்.

இதையும் படிங்க: 'அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர்'

சென்னை: அண்ணா தொழிற்சங்கத்தின் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், சென்னை வேளச்சேரியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் இன்று (ஆக. 16) நடைபெற்றது.

தொழிற்சங்கத்தின் தெற்கு மண்டலச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும், 17 பணிமனைகளின் கிளை நிர்வாகிகள் பொறுப்புகளுக்கும், ரூ. 500-லிருந்து ரூ. 5,000 வரையிலான கட்டணத்தைச் செலுத்தி வேட்பு மனுவை உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர். ஆகஸ்ட் 22ஆம் தேதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

அரசு மறைக்க முயல்கிறது

இந்நிலையில், வேட்புமனு தாக்கலை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "எப்போதும் சமுதாயத் தலைவர்களை மதிக்கும் இயக்கம் அதிமுக தான். சுதந்திரத்திற்காக பல இன்னல்களை அனுபவித்தவர், மாவீரன் அழகு முத்துக்கோன்.

அவருக்கு அதிமுக சார்பில் எழும்பூரில் கம்பீரச் சிலை வடிவமைக்கப்பட்டது. அப்போது கண்ணப்பனும் அமைச்சராக இருந்தார். அழகு முத்துக்கோன் வீரத்தை திமுக அரசு மறைக்க முயல்கிறது.

நேற்று (ஆக. 15) வெளியிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில், அழகு முத்துக்கோன் பெயர் இடம்பெறாதது, யாதவர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.

'திமுகவினர் இல்லத்தரசிகளுக்கு நாமம்தான் போடுவார்கள்'

இதையறிந்து திமுக அமைச்சரவையில் உள்ள யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் ஆகியோர் கோபத்தில் ராஜினாமா செய்வார்களா..? அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் நிதிநிலை சீரமைந்த பிறகு தரப்படும் என்று முதலமைச்சர் கூறுவது, போகாத ஊருக்கு வழிதேடும் கருத்து.

மத்திய அரசு ஏற்றிக்கொடுத்த அகவிலைப்படியை மாநில அரசு ஏற்றித் தரவில்லை. அதிமுகவினர் உள்ளத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று பேச மாட்டோம். திமுகவினர் இல்லத்தரசி, அரசு ஊழியர்களுக்கு நாமம்தான் போடுவார்கள்.

'மலைக் கள்ளன்' படத்தில் எம்ஜிஆர் பாடிய 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..' என்ற பாடல் திமுகவிற்குப் பொருந்தும். ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நிதியை அதிகரிப்பது இயல்பானதுதான்.

அதிமுக நிலைப்பாடு

வேளாண் தனி நிதி அறிக்கை வரவேற்கக் கூடியதுதான். ஆனால், கூட்டுப்பண்ணை போன்றவற்றை ஏற்கெனவே நாங்கள் அறிவித்துவிட்டோம்.

அதிமுக, பாமகவின் தோழமைத் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியை ராமதாஸ் தற்போதுவரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தலில் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, அடுத்தவர்மீது பழிபோட்டுவிட்டு 'The great escape' என்று சொல்லும் விதமாக திமுக தற்போது நடந்து கொண்டுள்ளது. அர்ச்சகர் ஆவோர் அகம விதிகளை முறையாக கற்க வேண்டும் என்பதே அதிமுக நிலைப்பாடு.

அசல் ஹீரோ எம்ஜிஆர்

'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்தது தொடர்பாக ஏற்கெனவே கண்டனம் தெரிவித்தோம். தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளோம்.

சார்பட்டா பரம்பரையில் குறிப்பிட்ட சில காட்சிகளில் உண்மைக்கு மாறான விஷயங்கள் உள்நோக்கோடு இருக்கிறது. எம்ஜிஆர் Sports man ஆவார். தண்டால், சிலம்பம், கோல் சண்டை செய்வார். திரைப்படத்திலும், அரசியலிலும் அசல் ஹீரோ, எம்ஜிஆர்தான்.

முகமது அலியை அழைத்துவந்து விழா நடத்தி குத்துச்சண்டையை ஊக்குவித்தவர், எம்ஜிஆர். சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு உடலைத் திடமாக வைத்துக்கொள்வது தொடர்பாக அவர் அறிவுரை கூறியுள்ளார்.

'சார்பட்டா பரம்பரை'

வளரும் இளைஞர்கள் மத்தியில் திமுக தான் விளையாட்டை ஊக்குவிப்பதாகக் காட்டியுள்ளனர். இந்தப் படத்தை எடுப்பதற்காக திமுகவிடம் பணம் வாங்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்தப் படம் மூலம் அரசியலை புகுத்தி ஆதாயம் தேட சதிசெய்துள்ளனர்.

முதல் கையெழுத்து மூலம் பூரண மதுவிலக்கை கொண்டுவந்தவர், எம்ஜிஆர். சாராயத்தைக் கொண்டுவந்து குடிக்க கற்றுக்கொடுத்தது திமுகதான். படத்தில் திமுகவினரை உத்தமர்கள்போல காட்டியுள்ளனர்.

'சார்பட்டா பரம்பரை' திமுகவின் பரம்பரை படம். ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம். மிசாவில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டாரா? என்பது குறித்த உண்மை கதை எல்லோருக்கும் தெரியும்.

எம்ஜிஆரை அவமதிக்கும் செயலை அதிமுக ஒருபோதும் ஏற்காது. குத்துச்சண்டைக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது. வளர்ந்துவரும் இயக்குநர்களை மதிக்கிறோம்.

அவர்களை ஊக்கப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால், கண்டனம் தெரிவித்த பிறகும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கவில்லை" என்று பேசினார்.

இதையும் படிங்க: 'அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.