ETV Bharat / city

கோயில்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ஏக்கர் நிலம் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல்செய்ய உத்தரவு

author img

By

Published : Jun 8, 2021, 11:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டு கோயில்களுக்குச் சொந்தமான ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல்செய்த மனுவில், "தமிழ்நாடு அரசு 1985-86, 1956-87ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்ததாகவும், 2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறியுள்ளது.

இதில் மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். அதேபோல, கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு்களை அகற்ற வேண்டும் எனவும், கோயில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 விழுக்காட்டை கோயில்களுக்காகப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, 1985-87ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள நிலத்தின் விவரங்களையும், 2018-2020ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட நிலத்தின் விவரங்களையும் அறிக்கையாகத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கோவை கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை எனக் கடிதம் அனுப்பிய சூலூர் சார் பதிவாளர், அதுசம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு விரிவாகப் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல்செய்த மனுவில், "தமிழ்நாடு அரசு 1985-86, 1956-87ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்ததாகவும், 2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறியுள்ளது.

இதில் மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். அதேபோல, கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு்களை அகற்ற வேண்டும் எனவும், கோயில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 விழுக்காட்டை கோயில்களுக்காகப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, 1985-87ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள நிலத்தின் விவரங்களையும், 2018-2020ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட நிலத்தின் விவரங்களையும் அறிக்கையாகத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கோவை கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை எனக் கடிதம் அனுப்பிய சூலூர் சார் பதிவாளர், அதுசம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு விரிவாகப் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.