ETV Bharat / city

கரோனா இறப்பை ஆய்வு செய்ய குழு - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

author img

By

Published : Apr 21, 2020, 5:39 PM IST

சென்னை: கரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்கள் இறந்தால் அது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.

secretary
secretary

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”கரோனா தொற்றை உலக சுகாதார நிறுவனம் பெரும் தொற்றாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு பரிசோதனை மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் இறப்பு ஒரு சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பெறுபவர்களில் இறக்கும் சிலரின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதில் சிரமம் உள்ளது. எனவே அவர்களின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினர் இரு நாட்களுக்கு ஒரு முறை கூடி இறப்பு குறித்து தணிக்கை செய்ய வேண்டும். அதன் முடிவை பொது சுகாதார இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இக்குழுவினர் எதிர்காலத்தில் இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியது!

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”கரோனா தொற்றை உலக சுகாதார நிறுவனம் பெரும் தொற்றாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு பரிசோதனை மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் இறப்பு ஒரு சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பெறுபவர்களில் இறக்கும் சிலரின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதில் சிரமம் உள்ளது. எனவே அவர்களின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினர் இரு நாட்களுக்கு ஒரு முறை கூடி இறப்பு குறித்து தணிக்கை செய்ய வேண்டும். அதன் முடிவை பொது சுகாதார இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இக்குழுவினர் எதிர்காலத்தில் இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.