ETV Bharat / city

ஆறு லட்சம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்படும் - அரசு தகவல்

சென்னை: ஆறு லட்சம் விலையில்லா வெள்ளாடுகள் 2020 - 21 ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ளதாக கால்நடைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 17, 2020, 4:30 PM IST

goats
goats

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட கால்நடைத்துறை கொள்கை விளக்க குறிப்பில், “விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-20 வரை 99,379 பெண் பயனாளிகளுக்கு 99,379 கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பசுக்கள் 11.99 லட்சம் கன்றுகளை ஈன்றுள்ளது. இவற்றின் மதிப்பு 99.31 கோடி ஆகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் 2020 -2021 ஆம் ஆண்டிலும் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு 12,000 விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் விலையில்லா வெள்ளாடுகள் / செம்மறியாடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2019-20 வரை 11,67,674 ஏழைப் பெண்களுக்கு, 46,70,696 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடுகள் 78.13 லட்சம் குட்டிகளை ஈன்றது. அவற்றின் மதிப்பு ரூ.1953.44 கோடி ஆகும். இந்தத் திட்டத்தின்படி, 2020-21 ஆம் ஆண்டில் 1,50,000 பயனாளிகளுக்கு ஆறு லட்சம் வெள்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட கால்நடைத்துறை கொள்கை விளக்க குறிப்பில், “விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-20 வரை 99,379 பெண் பயனாளிகளுக்கு 99,379 கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பசுக்கள் 11.99 லட்சம் கன்றுகளை ஈன்றுள்ளது. இவற்றின் மதிப்பு 99.31 கோடி ஆகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் 2020 -2021 ஆம் ஆண்டிலும் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு 12,000 விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் விலையில்லா வெள்ளாடுகள் / செம்மறியாடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2019-20 வரை 11,67,674 ஏழைப் பெண்களுக்கு, 46,70,696 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடுகள் 78.13 லட்சம் குட்டிகளை ஈன்றது. அவற்றின் மதிப்பு ரூ.1953.44 கோடி ஆகும். இந்தத் திட்டத்தின்படி, 2020-21 ஆம் ஆண்டில் 1,50,000 பயனாளிகளுக்கு ஆறு லட்சம் வெள்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்' - பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.