ETV Bharat / city

10 நாள்களில் ஊரடங்கை மீறியதாக 65 ஆயிரம் பேர் கைது!

author img

By

Published : Apr 5, 2020, 12:11 AM IST

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாள்களில் 64 ஆயிரத்து 733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

10 நாட்களில் தமிழக காவல்துறை 58 ஆயிரத்து 440 வழக்குகளை பதிவு
10 நாட்களில் தமிழக காவல்துறை 58 ஆயிரத்து 440 வழக்குகளை பதிவு

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் காவல் துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 10 நாள்களில் காவல் துறை 58 ஆயிரத்து 440 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இதில் 64 ஆயிரத்து 733 பேரை கைதுசெய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்து 945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18 லட்சத்து 29 ஆயிரத்து 444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் காவல் துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 10 நாள்களில் காவல் துறை 58 ஆயிரத்து 440 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இதில் 64 ஆயிரத்து 733 பேரை கைதுசெய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்து 945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18 லட்சத்து 29 ஆயிரத்து 444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.