கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் காவல் துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 10 நாள்களில் காவல் துறை 58 ஆயிரத்து 440 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இதில் 64 ஆயிரத்து 733 பேரை கைதுசெய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்து 945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18 லட்சத்து 29 ஆயிரத்து 444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.