கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. பின்னர், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும், சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், ஐந்து முதல் 12 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனால் விவசாய பொருட்களை கொண்டுச் செல்லும் போது, கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலித்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
![chennai highcourt](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-tollgatecollectiondismissed-script-7204624_27042020144410_2704f_1587978850_491.jpeg)