ETV Bharat / city

விதைச் சட்ட விதிமீறல்கள் 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை

ஆய்வறிக்கை இல்லாமல் விதை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விதைச் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக 62.34 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 28, 2022, 10:41 PM IST

விதைச் சட்ட விதிமீறல்கள் 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை
விதைச் சட்ட விதிமீறல்கள் 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு, விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகள் விநியோகத்தைத் தீவிரமாகக் கண்காணித்திட சிறப்பு ஆய்வுக் குழு அமைத்து, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்திட இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில், கடந்த மே 24 அன்று மேட்டூர் அணையினை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிலையில், அரசு விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விதையினை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று விதைச் சான்றுத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகள் கிடைப்பதை உறுதி செய்திட கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களைத் தீவிரமாக ஆய்வு செய்திட ஆறு சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இச்சிறப்பு ஆய்வுக் குழுக்கள் டெல்டா மாவட்டங்களில் 83 அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும் 189 தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, விதை விற்பனையாளர்களின் விதை உரிமம், விதை இருப்பு பதிவேடு, தரமான விதைகளை கொள்முதல் செய்த விபரப்பட்டியல், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது, விற்பனை இரசீது வழங்குவது குறித்த பல்வேறு காரணிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின்போது, விதை இருப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்கப்படாதது, விதை முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விதைச் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக 62.34 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 240 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை விரைவில் பெற்று அதற்கேற்ப துறை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகள் விதை தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால்,

  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    தஞ்சாவூர், புதுக்கோட்டை, 9360999666
  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை
    7708106521
  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    கடலூர்
    9080048219
  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    திருச்சி, அரியலூர்
    9443645845

மேல்குறிப்பிட்டுள்ள விதை ஆய்வு துணை இயக்குநர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் உயருகிறதா தக்காளி விலை? கோயம்பேடு மார்கெட் நிலவரம்!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு, விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகள் விநியோகத்தைத் தீவிரமாகக் கண்காணித்திட சிறப்பு ஆய்வுக் குழு அமைத்து, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்திட இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில், கடந்த மே 24 அன்று மேட்டூர் அணையினை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிலையில், அரசு விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விதையினை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று விதைச் சான்றுத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகள் கிடைப்பதை உறுதி செய்திட கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களைத் தீவிரமாக ஆய்வு செய்திட ஆறு சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இச்சிறப்பு ஆய்வுக் குழுக்கள் டெல்டா மாவட்டங்களில் 83 அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும் 189 தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, விதை விற்பனையாளர்களின் விதை உரிமம், விதை இருப்பு பதிவேடு, தரமான விதைகளை கொள்முதல் செய்த விபரப்பட்டியல், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது, விற்பனை இரசீது வழங்குவது குறித்த பல்வேறு காரணிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின்போது, விதை இருப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்கப்படாதது, விதை முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விதைச் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக 62.34 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 240 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை விரைவில் பெற்று அதற்கேற்ப துறை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகள் விதை தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால்,

  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    தஞ்சாவூர், புதுக்கோட்டை, 9360999666
  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை
    7708106521
  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    கடலூர்
    9080048219
  • விதை ஆய்வு துணை இயக்குநர்
    திருச்சி, அரியலூர்
    9443645845

மேல்குறிப்பிட்டுள்ள விதை ஆய்வு துணை இயக்குநர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் உயருகிறதா தக்காளி விலை? கோயம்பேடு மார்கெட் நிலவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.