சென்னை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசால், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களைத் தயாரித்தல், சேமித்துவைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருள்களான உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தும் நெகிழித் தாள் / உறை, உணவு அருந்தும் மேசையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள், தெர்மாகோல் தட்டுகள் போன்ற 14 வகையான நெகிழிப் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.