ETV Bharat / city

மனைவி கண் முன்னே ரவுடி வெட்டிக் கொலை.. நீதிமன்றத்தில் இருவர் சரண்...

author img

By

Published : Sep 7, 2022, 1:02 PM IST

திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மனைவி கண் முன்னே சரமாரி தாக்குதல்
மனைவி கண் முன்னே சரமாரி தாக்குதல்

சென்னை: திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(31), என்பவர் மர்ம நபர்கள் இருவரால் நேற்று(செப்.06) மாலை 7 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி ஓலை சரவணன் நேற்று மாலை வீட்டிலிருந்து தனது மனைவியோடு காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் மனைவி கண்முன்னே, ரவுடி ஓலை சரவணனை தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் இது குறித்து ஓலை சரவணன் மனைவி திருவான்மியூர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் சரவணனின் மனைவி கூறிய போது, கொலை செய்ய வருவதை உணர்ந்து கொண்ட சரவணன் தன்னை தள்ளிவிட்டு தனது உயிரை காப்பாற்றியதாக கூறியுள்ளார். மேலும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை போலீசார் தேடினர். சரவணன் சமீபத்தில் கடந்த மே மாதம் தான் வழக்கு ஒன்றில், சிறை சென்று வெளியில் வந்துள்ளார்.

கொலை வழக்கு, இரண்டு கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. சரவணன் ஒரு கையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் மற்றும் அடையார் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் இரண்டு தனிப்படையினர் தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்த அடையார் மல்லிகை பூ நகரை சேர்ந்த ராஜதுரை(26), கோல்டு ராஜ்குமார்(24), ஆகிய இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே நடந்த கொலை ஒன்றிற்காக பழிக்கு பழியாக கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவான்மியூர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

சென்னை: திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(31), என்பவர் மர்ம நபர்கள் இருவரால் நேற்று(செப்.06) மாலை 7 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி ஓலை சரவணன் நேற்று மாலை வீட்டிலிருந்து தனது மனைவியோடு காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் மனைவி கண்முன்னே, ரவுடி ஓலை சரவணனை தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் இது குறித்து ஓலை சரவணன் மனைவி திருவான்மியூர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் சரவணனின் மனைவி கூறிய போது, கொலை செய்ய வருவதை உணர்ந்து கொண்ட சரவணன் தன்னை தள்ளிவிட்டு தனது உயிரை காப்பாற்றியதாக கூறியுள்ளார். மேலும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை போலீசார் தேடினர். சரவணன் சமீபத்தில் கடந்த மே மாதம் தான் வழக்கு ஒன்றில், சிறை சென்று வெளியில் வந்துள்ளார்.

கொலை வழக்கு, இரண்டு கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. சரவணன் ஒரு கையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் மற்றும் அடையார் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் இரண்டு தனிப்படையினர் தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்த அடையார் மல்லிகை பூ நகரை சேர்ந்த ராஜதுரை(26), கோல்டு ராஜ்குமார்(24), ஆகிய இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே நடந்த கொலை ஒன்றிற்காக பழிக்கு பழியாக கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவான்மியூர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.