ETV Bharat / city

ஏறுமுகம் காணும் கரோனா: மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

author img

By

Published : Aug 6, 2021, 7:48 AM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்தாலோசிக்கவுள்ளார்.

CM STALIN
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 452 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 25 லட்சத்து 69 ஆயிரத்து 398 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. நேற்று (ஆக. 5) ஒரேநாளில் மட்டும் 1,997 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 33 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் வெளியான தகவலின்படி, ஈரோடு உள்பட 21 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் மருத்துவ வல்லுநர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுடன் இன்று (ஆகஸ்ட் 6) நண்பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஊரடங்கு அறிவிப்பு

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே கரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதால், ஊடரங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து அந்த முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 452 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 25 லட்சத்து 69 ஆயிரத்து 398 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. நேற்று (ஆக. 5) ஒரேநாளில் மட்டும் 1,997 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 33 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் வெளியான தகவலின்படி, ஈரோடு உள்பட 21 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் மருத்துவ வல்லுநர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுடன் இன்று (ஆகஸ்ட் 6) நண்பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஊரடங்கு அறிவிப்பு

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே கரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதால், ஊடரங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து அந்த முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.