சென்னை தலைமைச் செயலகத்தில் அவைத்தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டனர்.
மேலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.
!['எந்த தேதி? எந்த துறை?' - மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த கால அட்டவணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6263321_iohk.jpg)
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவைத்தலைவர் தனபால், "மார்ச் மாதம் 9ஆம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு தீர்மானங்களுடன் சட்டப்பேரவைத் தொடங்கும். இதில் மறைந்த திமுக உறுப்பினர்கள் கே.பி.பி. சாமி, காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மொத்தம் 23 நாள்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி நிறைவடையும்" என்று தெரிவித்தார்.