ETV Bharat / city

காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் காவலர் உடல்

author img

By

Published : May 19, 2021, 4:13 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் காவலர் உடல் மீட்கப்பட்டது.

காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் காவலர் உடல்
காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் காவலர் உடல்

சென்னை - வடபழனி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வந்தவர், செந்தில் ஆறுமுகம்(36). தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இவர் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். செந்தில் ஆறுமுகம் மதுபோதைக்கு அடிமையானதால், அவரது மனைவி உமா மகேஸ்வரி, அவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

செந்தில் ஆறுமுகத்திற்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 6ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றபோது, உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமையில் இருந்த அவரின் வீட்டுக் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து, பார்த்த போது செந்தில் ஆறுமுகம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செந்தில் ஆறுமுகம் இரண்டு நாட்களுக்கு முன் இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் உடல் கூராய்வு அறிக்கை வந்த பிறகே இறந்த விவரம் குறித்து தெளிவாக தெரியவரும் என தெரிவித்தனர். இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பொதுமக்களைத் தாக்க முயன்ற ஆயுதப்படைக்காவலர்'; சிசிடிவி காட்சி வைரல்!

சென்னை - வடபழனி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வந்தவர், செந்தில் ஆறுமுகம்(36). தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இவர் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். செந்தில் ஆறுமுகம் மதுபோதைக்கு அடிமையானதால், அவரது மனைவி உமா மகேஸ்வரி, அவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

செந்தில் ஆறுமுகத்திற்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 6ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றபோது, உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமையில் இருந்த அவரின் வீட்டுக் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து, பார்த்த போது செந்தில் ஆறுமுகம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செந்தில் ஆறுமுகம் இரண்டு நாட்களுக்கு முன் இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் உடல் கூராய்வு அறிக்கை வந்த பிறகே இறந்த விவரம் குறித்து தெளிவாக தெரியவரும் என தெரிவித்தனர். இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பொதுமக்களைத் தாக்க முயன்ற ஆயுதப்படைக்காவலர்'; சிசிடிவி காட்சி வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.