ETV Bharat / city

திராவிடர் விடுதலைக் கழகம் மீது ரஜினி ரசிகர்கள் புகார்

சென்னை: திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 15 பேர் மீது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

author img

By

Published : Jan 28, 2020, 5:28 PM IST

complaint
complaint

சென்னை செம்மொழிப் பூங்கா அருகே கடந்த 22ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி தலைமையில் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரஜினி ரசிகர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர்.

புகாரளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் கோபி, நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும்வகையில் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 15 நபர்கள் மீது, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடிகர் ரஜினிகாந்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகம் மீது ரஜினி ரசிகர்கள் புகார்

இதையும் படிங்க:’ஒரு படமும் ஓடாது, நடவடிக்கைகள் முடக்கப்படும்’ - ரஜினியை எச்சரிக்கும் தி.வி.க.!

சென்னை செம்மொழிப் பூங்கா அருகே கடந்த 22ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி தலைமையில் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரஜினி ரசிகர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர்.

புகாரளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் கோபி, நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும்வகையில் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 15 நபர்கள் மீது, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடிகர் ரஜினிகாந்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகம் மீது ரஜினி ரசிகர்கள் புகார்

இதையும் படிங்க:’ஒரு படமும் ஓடாது, நடவடிக்கைகள் முடக்கப்படும்’ - ரஜினியை எச்சரிக்கும் தி.வி.க.!

Intro:Body:*சென்னை - காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட விடுதலை கழகத்தினர் மீது ரஜினி ரசிகர்கள் புகார்*

திராவிட விடுதலை கழகத்தினர் 15 பேர் மீது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை செம்மொழிப் பூங்கா அருகே கடந்த 22 ஆம் தேதி திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த உமாபதி தலைமையில் நடிகர் ரஜினிகாந்த்க்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரஜினி ரசிகர்கள் 75க்கும் மேற்பட்டோர் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த 15 பேர் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். இது தொடர்பாக பேட்டியளித்த ரஜினி ரசிகர் கோபி, நடிகர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 15 நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு புகழ் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக காவல் ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

(பேட்டி - கோபி - ரஜினி ரசிகர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.