ETV Bharat / city

பொதுத் தேர்வுக்குத் தயராகும் தேர்வுத் துறை

author img

By

Published : Oct 8, 2021, 6:19 AM IST

2021-2022ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதற்குரிய பணிகளை அரசுத் தேர்வுகள் துறை தொடங்கியது. மேலும், நடப்புக் கல்வியாண்டில் வழக்கம்போல் பொதுத்தேர்வுகளை நடத்தவும் திட்டமிட்டு தேர்வு மையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

பொதுத் தேர்வுக்கு தயராகும் தேர்வுத்துறை
பொதுத் தேர்வுக்கு தயராகும் தேர்வுத்துறை

சென்னை: கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. இதனால் 2019-20ஆம் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

2020-21இல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடையச் செய்யப்பட்டனர். அப்பொழுது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே ஒன்பது, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மட்டும் பதிவுசெய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்குரிய புதிய தேர்வு மையங்களை அமைப்பதற்கு உரிய கருத்துகளை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சேது ராம வர்மா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தேர்வு மையங்களாகச் செயல்பட்டுவரும் பள்ளிகள், புதிதாகத் தேர்வு மையங்களை அமைக்க விரும்பும் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

10 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வெழுதும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்க அறிவுறுத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாத பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. புதிய தேர்வு மையங்களை அமைக்க விரும்பும் பள்ளிகள், தேர்வு மையங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் பள்ளிகள் அரசின் தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் அடிப்படையில் அரசு அளிக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுத் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையை அரசின் அனுமதியுடன் அரசுத் தேர்வுத் துறை பின்னர் வெளியிடும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சர் அறிவித்தும் வெளியாகாத அரசாணை... குழப்பத்தில் அரசு பள்ளி மாணவர்கள்!

சென்னை: கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. இதனால் 2019-20ஆம் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

2020-21இல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடையச் செய்யப்பட்டனர். அப்பொழுது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே ஒன்பது, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மட்டும் பதிவுசெய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்குரிய புதிய தேர்வு மையங்களை அமைப்பதற்கு உரிய கருத்துகளை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சேது ராம வர்மா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தேர்வு மையங்களாகச் செயல்பட்டுவரும் பள்ளிகள், புதிதாகத் தேர்வு மையங்களை அமைக்க விரும்பும் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

10 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வெழுதும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்க அறிவுறுத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாத பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. புதிய தேர்வு மையங்களை அமைக்க விரும்பும் பள்ளிகள், தேர்வு மையங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் பள்ளிகள் அரசின் தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் அடிப்படையில் அரசு அளிக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுத் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையை அரசின் அனுமதியுடன் அரசுத் தேர்வுத் துறை பின்னர் வெளியிடும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சர் அறிவித்தும் வெளியாகாத அரசாணை... குழப்பத்தில் அரசு பள்ளி மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.