ETV Bharat / city

நிவர் புயலால் மருத்துவப் படிப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

author img

By

Published : Nov 23, 2020, 10:20 PM IST

Updated : Nov 23, 2020, 10:27 PM IST

சென்னை : நிவர் புயல் காரணமாக வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நிவர் புயலால் மருத்துவ படிப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
நிவர் புயலால் மருத்துவ படிப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது வரும் 25ஆம் தேதி மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த ஏழு மாவட்டங்களில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் பாதிப்பு இருக்கும் நாள்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கும், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் 25ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதிக்கும், 26ஆம் நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 17ஆம் தேதிக்கும், 27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 19ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், வரும் 25ஆம் தேதி நடைபெறவிருந்த எம்எஸ்சி நர்சிங் முதலாமாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 2ஆம் தேதிக்கும், 26ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் டிசம்பர் 3ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது வரும் 25ஆம் தேதி மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த ஏழு மாவட்டங்களில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் பாதிப்பு இருக்கும் நாள்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கும், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் 25ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதிக்கும், 26ஆம் நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 17ஆம் தேதிக்கும், 27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 19ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், வரும் 25ஆம் தேதி நடைபெறவிருந்த எம்எஸ்சி நர்சிங் முதலாமாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 2ஆம் தேதிக்கும், 26ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் டிசம்பர் 3ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Nov 23, 2020, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.