ETV Bharat / city

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு செப். 20  முதல் விண்ணப்பம்

author img

By

Published : Sep 18, 2021, 2:13 PM IST

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 207 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை எழுத செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 207 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை இணையவழியாக நடைபெறுகிறது.

இந்தத் தேர்வினை எழுத செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கணினி சர்வர் பிரச்சினையால் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்க முடியவில்லை எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் முதல் நிலை, கணினி பயிற்றுநர்கள் முதல் நிலை ஆகிய பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 207 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வு கட்டண விவரங்கள்

ஒவ்வொரு பாட வாரியாக எத்தனை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விவரமும், துறை வாரியாக எத்தனை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பட்டியலும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாய் கட்டினால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பப்பதிவு உள்பட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறும். விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட மாட்டாது, விண்ணப்பங்களை அனுப்பினால் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இணையவழித் தேர்வு

விண்ணப்பிக்கும்போது தெரிவிக்கும் அனைத்துச் சான்றிதழ்களையும் சரிபார்ப்பின்போது காண்பிக்க வேண்டும். மேலும், எழுத்துத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் எனவும், அவற்றில் 50 விழுக்காடு மதிப்பெண்களை சிறுவர்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

அருந்ததியர் ஆதிதிராவிடர் வகுப்பினர் 45 விழுக்காடு மதிப்பெண்களும், பழங்குடியினர் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும் தகுதிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வு கணினி மூலம் இணையதளத்தில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். இதன் மூலம் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் தேவையா?

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 207 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை இணையவழியாக நடைபெறுகிறது.

இந்தத் தேர்வினை எழுத செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கணினி சர்வர் பிரச்சினையால் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்க முடியவில்லை எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் முதல் நிலை, கணினி பயிற்றுநர்கள் முதல் நிலை ஆகிய பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 207 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வு கட்டண விவரங்கள்

ஒவ்வொரு பாட வாரியாக எத்தனை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விவரமும், துறை வாரியாக எத்தனை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பட்டியலும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாய் கட்டினால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பப்பதிவு உள்பட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறும். விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட மாட்டாது, விண்ணப்பங்களை அனுப்பினால் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இணையவழித் தேர்வு

விண்ணப்பிக்கும்போது தெரிவிக்கும் அனைத்துச் சான்றிதழ்களையும் சரிபார்ப்பின்போது காண்பிக்க வேண்டும். மேலும், எழுத்துத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் எனவும், அவற்றில் 50 விழுக்காடு மதிப்பெண்களை சிறுவர்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

அருந்ததியர் ஆதிதிராவிடர் வகுப்பினர் 45 விழுக்காடு மதிப்பெண்களும், பழங்குடியினர் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும் தகுதிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வு கணினி மூலம் இணையதளத்தில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். இதன் மூலம் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் தேவையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.