ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா: எண்ணிக்கை 7ஆக உயர்வு

author img

By

Published : Mar 22, 2020, 12:21 PM IST

சென்னை: ஸ்பெயினிலிருந்து தமிழ்நாடு வந்த நபருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

corona
corona

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்துள்ள நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாக விஜய பாஸ்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6ஆக இருந்தநிலையில் தற்போது ஏழாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலில் பாதிப்புக்குள்ளான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். ஆறு பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு - 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து!

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்துள்ள நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாக விஜய பாஸ்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6ஆக இருந்தநிலையில் தற்போது ஏழாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலில் பாதிப்புக்குள்ளான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். ஆறு பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு - 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.