ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேர் கைது!

author img

By

Published : Apr 1, 2020, 8:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தவை மீறியதாக ஒரே வாரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Case filed  One Lakh peoples arrested in Tamil Nadu for violating curfew  violating curfew  தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேர் கைது  ஊரடங்கு உத்தரவு மீறல்  தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு
Case filed One Lakh peoples arrested in Tamil Nadu for violating curfew violating curfew தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேர் கைது ஊரடங்கு உத்தரவு மீறல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போலீசார் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த ஏழு நாள்களில் தமிழ்நாடு காவலர்கள் 1,08,922 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தடையை மீறியதாக 1,25,793 பேரை காவல் துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

85,850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.39,36,852 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் மட்டும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இந்தியா பாடம் படிக்க வேண்டும்!

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போலீசார் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த ஏழு நாள்களில் தமிழ்நாடு காவலர்கள் 1,08,922 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தடையை மீறியதாக 1,25,793 பேரை காவல் துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

85,850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.39,36,852 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் மட்டும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இந்தியா பாடம் படிக்க வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.