ETV Bharat / city

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது - ஜெயக்குமார் - சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் கிடையாது

சசிகலாவை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவருக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
author img

By

Published : Apr 7, 2022, 12:18 PM IST

Updated : Apr 7, 2022, 12:24 PM IST

சென்னை: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதத்தின்போது சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

வைத்தியலிங்கத்தை சமாதானப் படுத்துவதற்காக அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வைத்தியலிங்கம் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் தமிழ்மகன் உசேன் திரும்பி வந்தார். இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் கூட்டத்திற்கு திரும்பி வந்தார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, "இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து அனைவரும் கலந்து ஆலோசனை நடத்தினோம்.

எந்த வாக்குவாதமும் ஏற்படவில்லை, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் மகிழ்ச்சியாக வெளியே வந்ததை நீங்களே பார்த்தீர்கள். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது.

வைத்தியலிங்கத்திற்கு வேலை இருந்ததால் சென்று விட்டார். மீண்டும் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சசிகலாவை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் அடாவடிதனத்தில் ஈடுபடுகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுக்கு இருந்த வாக்கு வங்கி தற்போதும் நீடிக்கிறது. ஒருபோதும் அமமுகவின் வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாத்த எனக்கு சிறை, கள்ள ஓட்டு போட்டவருக்கு பாதுகாப்பு. இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய நிலை" என்றார்.

இதையும் படிங்க: தரமற்ற பொங்கல் பரிசுகள்: அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சொன்ன உயர் நீதிமன்றம்

சென்னை: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதத்தின்போது சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

வைத்தியலிங்கத்தை சமாதானப் படுத்துவதற்காக அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வைத்தியலிங்கம் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் தமிழ்மகன் உசேன் திரும்பி வந்தார். இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் கூட்டத்திற்கு திரும்பி வந்தார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, "இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து அனைவரும் கலந்து ஆலோசனை நடத்தினோம்.

எந்த வாக்குவாதமும் ஏற்படவில்லை, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் மகிழ்ச்சியாக வெளியே வந்ததை நீங்களே பார்த்தீர்கள். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது.

வைத்தியலிங்கத்திற்கு வேலை இருந்ததால் சென்று விட்டார். மீண்டும் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சசிகலாவை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் அடாவடிதனத்தில் ஈடுபடுகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுக்கு இருந்த வாக்கு வங்கி தற்போதும் நீடிக்கிறது. ஒருபோதும் அமமுகவின் வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாத்த எனக்கு சிறை, கள்ள ஓட்டு போட்டவருக்கு பாதுகாப்பு. இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய நிலை" என்றார்.

இதையும் படிங்க: தரமற்ற பொங்கல் பரிசுகள்: அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சொன்ன உயர் நீதிமன்றம்

Last Updated : Apr 7, 2022, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.