ETV Bharat / city

பெண் காவல் அலுவலர் தாக்கியதால் மனமுடைந்த பெண் தீக்குளிக்க முயற்சி! - Nolampur police have attacked the woman who came to report

சென்னை: புகாரளிக்கச் சென்ற பெண்ணை , பணியிலிருந்த பெண் காவல் அலுவலர் தாக்கியதால் மனமுடைந்த அவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தீக்குளிக்க முயற்சி!
author img

By

Published : Sep 30, 2019, 1:36 PM IST

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் கோபி. செப்டம்பர் 2ஆம் தேதியன்று இரவு இவர் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த முத்துப்பாண்டி என்ற நபர் அவரின் மகன் குறித்து தகராறு செய்ததாகவும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்த அவரது மகள் ஜோதி, அவரை அழைத்துக் கொண்டு, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் ஜோதியை காலையில் வந்து புகார் தருமாறு கூறியுள்ளனர்.

அப்போது முத்துபாண்டியை கைது செய்யுமாறு வலியுறுத்திய ஜோதியை பணியிலிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் லூர்து மேரி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜோதி தனது வீட்டுக்குச் சென்று, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முத்திப்பாண்டியால் தாக்கப்பட்ட கோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

அவரை அக்கம்பத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே புகாரளிக்கச் சென்ற தன்னை பெண் காவல் அலுவலர் அவமானப்படுத்தியதாலேயே தற்கொலைக்கு முயன்றதாக, ஜோதி வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன்படி நொளம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜோதி தாக்கப்பட்டதாக கூறும் நேரத்தில் பணியிலிருந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஜோதியின் தந்தையை தாக்கியதாகக் கூறப்படும் முத்துப்பாண்டியையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்க:

போதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை! மகள் மாயமானதால் தாய் தற்கொலை முயற்சி!

புற்றுநோயாளிகளுக்காக தனது கெட்டப்பையே மாற்றிக் கொண்ட பெண் காவல்துறை அதிகாரி!

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் கோபி. செப்டம்பர் 2ஆம் தேதியன்று இரவு இவர் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த முத்துப்பாண்டி என்ற நபர் அவரின் மகன் குறித்து தகராறு செய்ததாகவும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்த அவரது மகள் ஜோதி, அவரை அழைத்துக் கொண்டு, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் ஜோதியை காலையில் வந்து புகார் தருமாறு கூறியுள்ளனர்.

அப்போது முத்துபாண்டியை கைது செய்யுமாறு வலியுறுத்திய ஜோதியை பணியிலிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் லூர்து மேரி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜோதி தனது வீட்டுக்குச் சென்று, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முத்திப்பாண்டியால் தாக்கப்பட்ட கோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

அவரை அக்கம்பத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே புகாரளிக்கச் சென்ற தன்னை பெண் காவல் அலுவலர் அவமானப்படுத்தியதாலேயே தற்கொலைக்கு முயன்றதாக, ஜோதி வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன்படி நொளம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜோதி தாக்கப்பட்டதாக கூறும் நேரத்தில் பணியிலிருந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஜோதியின் தந்தையை தாக்கியதாகக் கூறப்படும் முத்துப்பாண்டியையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்க:

போதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை! மகள் மாயமானதால் தாய் தற்கொலை முயற்சி!

புற்றுநோயாளிகளுக்காக தனது கெட்டப்பையே மாற்றிக் கொண்ட பெண் காவல்துறை அதிகாரி!

Intro:Body:*சென்னை நொளம்பூரில் காவல்நிலையத்துக்கு புகாரளிக்க சென்ற பெண்ணொருவர், பணியிலிருந்த பெண் காவல் அதிகாரி தன்னை தாக்கியதால் மனமுடைந்ததாகக் கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.*

சென்னை முகப்பேரை சேர்ந்த ஜோதி என்ற பெண், தீயணைப்பு துறை டிஜிபி காந்திராஜன் வீட்டில் துப்புரவு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஜோதி, தனது தந்தையுடன் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த முத்துப்பாண்டி என்ற நபர் ஜோதியின் அண்ணன் எங்கே என்று கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஜோதியின் தந்தை கோபியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது தந்தையை அழைத்துக் கொண்டு ஜோதி, இரவு 12 மணியளவில் நொளம்பூர் காவல் நிலையத்துக்கு புகாரளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த காவலர்கள் ஜோதியை காலையில் வருமாறு கூறி, புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

தனது தந்தையை தாக்கியவன் தங்கள் வீட்டருகிலேயே இருப்பதாகவும், அவனை கைது செய்யுமாறும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் லூர்து மேரி என்பவர் ஜோதியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜோதி தனது வீட்டுக்கு சென்று, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம்பத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

42 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஜோதிக்கு, அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புகார் அளிக்க சென்ற தன்னை பெண் காவல் அதிகாரி லூர்து மேரி தாக்கி, அவமானப்படுத்தியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை முயன்றதாகவும், ஜோதி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இளம்பெண் ஜோதி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நொளம்பூர் போலீசார், ஜோதி தாக்கப்பட்டதாக கூறும் நேரத்தில் பணியிலிருந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஜோதியின் தந்தையை தாக்கியதாகக் கூறப்படும் முத்துப்பாண்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.