ETV Bharat / city

வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு - ஓலா பைக் ஓட்டுநர் கைது

author img

By

Published : May 18, 2022, 8:50 AM IST

தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை நிவேதா ஜெஸிகாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓலா பைக் ஓட்டுநரை ஆதம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஓலா பைக் ஓட்டுநருடன் காவல்துறை
ஓலா பைக் ஓட்டுநருடன் காவல்துறை

சென்னை: தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனையான நிவேதா ஜெஸிகா ஆதம்பாக்கத்தில் வசிக்கிறார். பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்பின் உரிமையாளர் நிவேதா ஜெஸிகா. இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

கடந்த வாரம் இரவு அண்ணா நகரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நிவேதா ஜெஸிகாவுக்கு அசோக் நகரில் இருந்து பின் தொடர்ந்த நபர் ஒருவர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த நபர் தன்னை மிரட்டிச் சென்றதாகவும் அவசர உதவி எண்ணை அழைத்தும் பலனில்லை என்றும் நிவேதா ஜெஸிகா குற்றஞ்சாட்டினார்.

ஓலா பைக் ஓட்டுநருடன் காவல்துறை
ஓலா பைக் ஓட்டுநருடன் காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தை இணைத்து இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினரிடம், உண்மையை ஒப்புக்கொண்ட அந்த நபர் ஓலா (OLA) பைக் ஓட்டி வருவதாகவும், அவ்வப்போது இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்ததையும் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மெரினாவில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற மூன்று பெண்கள் கைது!

சென்னை: தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனையான நிவேதா ஜெஸிகா ஆதம்பாக்கத்தில் வசிக்கிறார். பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்பின் உரிமையாளர் நிவேதா ஜெஸிகா. இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

கடந்த வாரம் இரவு அண்ணா நகரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நிவேதா ஜெஸிகாவுக்கு அசோக் நகரில் இருந்து பின் தொடர்ந்த நபர் ஒருவர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த நபர் தன்னை மிரட்டிச் சென்றதாகவும் அவசர உதவி எண்ணை அழைத்தும் பலனில்லை என்றும் நிவேதா ஜெஸிகா குற்றஞ்சாட்டினார்.

ஓலா பைக் ஓட்டுநருடன் காவல்துறை
ஓலா பைக் ஓட்டுநருடன் காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தை இணைத்து இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினரிடம், உண்மையை ஒப்புக்கொண்ட அந்த நபர் ஓலா (OLA) பைக் ஓட்டி வருவதாகவும், அவ்வப்போது இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்ததையும் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மெரினாவில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற மூன்று பெண்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.