ETV Bharat / city

புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ்?

author img

By

Published : Jan 28, 2021, 5:01 PM IST

சென்னை: தலைமைச் செயலாளர் சண்முகம் ஓய்வு பெறவுள்ள நிலையில், ராஜிவ் ரஞ்சன் ஐஏஎஸ், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ranjan
ranjan

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு, அக்டோபர் மாதத்தில் மேலும் மூன்று மாதங்கள், அதாவது இம்மாதம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதோடு, தனக்கு மேலும் பதவி நீட்டிப்பு வேண்டாம் என அவர் அரசிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்கும் முன்னதாக பணியில் சேர்ந்து டெல்லியில் பணியாற்றி வரும் ராஜிவ் ரஞ்சன் ஐஏஎஸ், மீண்டும் தமிழக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜீவ் ரஞ்சனை மீண்டும் மாநில அரசுப் பணிக்கு அனுப்பும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது. இதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், அவர் விரைவில் தமிழகம் திரும்புகிறார்.

இந்நிலையில், தமிழக அரசுப் பணிக்கு திரும்பும் ராஜீவ் ரஞ்சன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர், செப்டம்பரில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் ரஞ்சன் தற்போது மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளராக உள்ளார். இவர் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலராக இருந்த நிலையில், கடந்த 2018 இல் மத்திய அரசுப்பணியில் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ‘முகாமிற்கு அனுப்பினால் யானைக்கும் கரோனா இல்லை எனச் சான்றிதழ் வேண்டும்’ - தமிழ்நாடு அரசு

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு, அக்டோபர் மாதத்தில் மேலும் மூன்று மாதங்கள், அதாவது இம்மாதம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதோடு, தனக்கு மேலும் பதவி நீட்டிப்பு வேண்டாம் என அவர் அரசிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்கும் முன்னதாக பணியில் சேர்ந்து டெல்லியில் பணியாற்றி வரும் ராஜிவ் ரஞ்சன் ஐஏஎஸ், மீண்டும் தமிழக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜீவ் ரஞ்சனை மீண்டும் மாநில அரசுப் பணிக்கு அனுப்பும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது. இதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், அவர் விரைவில் தமிழகம் திரும்புகிறார்.

இந்நிலையில், தமிழக அரசுப் பணிக்கு திரும்பும் ராஜீவ் ரஞ்சன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர், செப்டம்பரில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் ரஞ்சன் தற்போது மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளராக உள்ளார். இவர் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலராக இருந்த நிலையில், கடந்த 2018 இல் மத்திய அரசுப்பணியில் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ‘முகாமிற்கு அனுப்பினால் யானைக்கும் கரோனா இல்லை எனச் சான்றிதழ் வேண்டும்’ - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.