ETV Bharat / city

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: சிபிஐயிடம் உயர் நீதிமன்றம் கேள்வி!

author img

By

Published : Oct 16, 2019, 7:20 PM IST

சென்னை: நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து பதிலளிக்க சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High court

மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத என்.ஆர்.ஐ. இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கொடுக்காமல் கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், அரசு அலுவலர்களின் துணையில்லாமல் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் எண்ணிக்கை விவரங்களை சிபிசிஐடி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டன. தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான முறைகேடுகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில்தான் நடைபெறுகிறது.

  • இதனை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
  • தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட காரணம் என்ன?
  • ராமநாதபுரம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்?
  • நீட் முறைகேடு தொடர்பாக மாணவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
  • அரசு அலுவலர்களை சரியாக கண்காணிக்காத நிலையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது சரியா?

என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். மேலும், மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்க மாணவர்களின் முகங்களை அடையாளம் காணும் வகையில் கருவிகள் பொறுத்த வேண்டும். மாணவர்களின் சேர்க்கையில் மோசடியை தவிர்க்க ஒருங்கிணைந்த குழுவை அமைத்து கண்காணிக்க மத்திய மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரம், முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள், இரண்டாம், மூன்றாம் முறை முயற்சி செய்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், நீட் முறைகேடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

சர்வதேச கிரிக்கெட்டை மிரட்ட வரும் சிபிஎல் நாயகர்கள்!

மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத என்.ஆர்.ஐ. இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கொடுக்காமல் கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், அரசு அலுவலர்களின் துணையில்லாமல் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் எண்ணிக்கை விவரங்களை சிபிசிஐடி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டன. தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான முறைகேடுகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில்தான் நடைபெறுகிறது.

  • இதனை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
  • தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட காரணம் என்ன?
  • ராமநாதபுரம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்?
  • நீட் முறைகேடு தொடர்பாக மாணவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
  • அரசு அலுவலர்களை சரியாக கண்காணிக்காத நிலையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது சரியா?

என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். மேலும், மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்க மாணவர்களின் முகங்களை அடையாளம் காணும் வகையில் கருவிகள் பொறுத்த வேண்டும். மாணவர்களின் சேர்க்கையில் மோசடியை தவிர்க்க ஒருங்கிணைந்த குழுவை அமைத்து கண்காணிக்க மத்திய மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரம், முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள், இரண்டாம், மூன்றாம் முறை முயற்சி செய்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், நீட் முறைகேடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

சர்வதேச கிரிக்கெட்டை மிரட்ட வரும் சிபிஎல் நாயகர்கள்!

Intro:Body:மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து பதிலளிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாத என்.ஆர்.ஐ. இடங்களை நிர்வாக ஒதுக்கீடுக்கு கொடுக்காமல் கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரசு அதிகாரிகளின் துணையில்லாமல் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், எத்தனைஅரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை சிபிசிஐடி அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளிடையே முறைகேட்டை தடுக்க முழு ஒத்துழைப்பு இல்லை. இந்தியா முழுவதும் 38,000 மருத்துவ இடங்களில் தமிழகத்தில் 7000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 இடங்களில் மற்ற மாநில மாணவர்களுக்கு அதிகமாக ஒதுக்கப்படுகிறது. இடஒதுக்கீடு இல்லாமல் பொதுப்பிரிவில் 4250 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டது?

* தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

* வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

* முறைகேடுகளை தவிர்க்க மாணவர்களின் முகங்களை அடையாளம் காணும் வகையில் கருவிகள் பொறுத்த வேண்டும்.

* பெரும்பாலான முறைகேடுகள் நிகர்நிலை பல்கலைகழகளில் தான் நடைபெறுகிறது.

* தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட காரணம் என்ன? ராமநாதபுரம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமே?

* நீட் முறைகேடு தொடர்பாக மாணவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியாக கண்கானிக்காத நிலையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதா?

* மாணவர்களின் சேர்க்கையில் மோசடியை தவிர்க்க ஒருங்கிணைந்த குழுவை அமைத்து கண்காணிக்க மத்திய மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

* தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து எத்தனை மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

* முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் 2, 3 முறை முயற்சி செய்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், நீட் முறைகேடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.