சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக புதிய பேருந்து வழி தட திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சென்ட்ரல் முதல் மயிலாப்பூர் டேங்க் வரை தினந்தோறும் 20 முறை இந்த வழித்தடம் வழியாக சிற்றுந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும்: இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சென்னையில் எந்தப் பகுதிகளில் எல்லாம் பள்ளி மாணவர்கள் செல்ல போதுமான பேருந்துகள் இல்லையோ, அந்தப் பகுதிகளைப் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து கண்டறிந்து போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அதேபோல், இரவு பேருந்துகள் போதுமான அளவு இயக்கப்படாத இடங்களையும் கண்டறிந்து பழையபடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
'உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்' - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் - பள்ளிக் கல்வித்துறை
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக வர தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என ஆவலுடன் காத்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக புதிய பேருந்து வழி தட திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சென்ட்ரல் முதல் மயிலாப்பூர் டேங்க் வரை தினந்தோறும் 20 முறை இந்த வழித்தடம் வழியாக சிற்றுந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும்: இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சென்னையில் எந்தப் பகுதிகளில் எல்லாம் பள்ளி மாணவர்கள் செல்ல போதுமான பேருந்துகள் இல்லையோ, அந்தப் பகுதிகளைப் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து கண்டறிந்து போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அதேபோல், இரவு பேருந்துகள் போதுமான அளவு இயக்கப்படாத இடங்களையும் கண்டறிந்து பழையபடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.