ETV Bharat / city

'தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்' - பிரதமரின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

கரோனாவை தடுக்க 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்த பிரதமரின் முடிவை தான் மனப்பூர்வமாக வரவேற்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 24, 2020, 10:59 PM IST

mk stalin tweet about 21 days lockdown
mk stalin tweet about 21 days lockdown

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாடினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்திக் கொள்வதின் அவசியம், மருத்துவர்களின் பணி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

கரோனாவிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற தனக்கு வேறு வழியில்லை எனக் கூறி இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கரோனாவின் கொடூரத்தைத் தடுக்க பிரதமர் எடுத்த முடிவை தான் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும், நோய் பரவாமல் தடுக்க வேறு வழியில்லை என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

'தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்' என்ற வாசகத்துடன் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாடினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்திக் கொள்வதின் அவசியம், மருத்துவர்களின் பணி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

கரோனாவிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற தனக்கு வேறு வழியில்லை எனக் கூறி இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கரோனாவின் கொடூரத்தைத் தடுக்க பிரதமர் எடுத்த முடிவை தான் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும், நோய் பரவாமல் தடுக்க வேறு வழியில்லை என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

'தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்' என்ற வாசகத்துடன் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.