சென்னை எண்ணூர் விரைவுச்சாலை - சுங்கச்சாவடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டு மின்விளக்குகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
அப்போது, வடசென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் எண்ணூர் விரைவுச் சாலையில், இந்தச் சாலையில் தான் சென்னை துறைமுகத்தில் இருந்து 90 விழுக்காடு வாகனங்கள் சென்று வருகின்றன. வடசென்னையை முன்னேற்ற 2001ஆம் ஆண்டு 160 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட திட்டங்கள், தற்போது 500 கோடி ரூபாய்க்கும் மேல் வரை உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் வட சென்னையில் இருந்து போக்குவரத்து பிரச்னைகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் வடசென்னையின் தோற்றத்தை தென்சென்னை போல் மாற்ற ரூபாய் 16 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நடிகர் கமலைச் சந்தித்த பின் அவருடைய நோய் ஸ்டாலினுக்கு போயுள்ளது. 'தெனாலிராமன்' படத்தில் எதற்கெடுத்தாலும் பயம் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்ததைப்போல், அவரைப் பார்த்துவிட்டு வந்த ஸ்டாலின் தேர்தல் என்றாலே பயந்து விடுகிறார். தேர்தல் நடக்க விடாமல் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஸ்டாலின்தான் போட்டு வருகிறார்.
இமய மலையையே ஸ்வாகா செய்யும் கட்சிதான் திமுக. ரூ. 1.76 கோடி ஊழல் செய்து சாப்பிட்டு ஜீரணம் ஆகிவிட்டது ஒன்றுமே தெரியாதது போல இருப்பதுதான் திமுகவின் வழக்கம். எதிர்க்கட்சியாக இருப்பதால் எதையும் தைரியமாக செய்யுங்கள் எனத் தொண்டர்களுக்கு வன்முறையை ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனால்தான் பஜ்ஜி கடை முதல் பேன்சி ஸ்டோர்கள் திமுகவினரின் தாக்குதல் நடைபெற்று வருகிறது. கோபவாதியான ஸ்டாலின் தற்போது குழப்பவாதி ஆக உள்ளார் என்ன மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இதையும் படிங்க: உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: 5ஆவது முறையாக விருது வாங்கி அசத்தல்!