ETV Bharat / city

கடந்த ஆட்சியில் சுடுகாட்டை மறித்து கட்டப்பட்ட அம்மா மினி கிளினிக் - மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Aug 8, 2022, 9:35 AM IST

கடந்த அதிமுக ஆட்சியில் சுடுகாட்டை மறித்து அம்மா மினி கிளினிக் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் சுடுகாட்டை மறித்து அம்மா மினி கிளினிக் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுடுகாட்டை மறித்து அம்மா மினி கிளினிக் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை: கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ பயனாளர்களுக்காக அம்மா மினி கிளினிக் என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் மக்களுக்கு பயன் ஏதுமில்லை என்றும், பல இடங்களில் அம்மா மினிக் கிளினிக் திட்டத்தின் பெயர் பலகை மட்டுமே உள்ளதாக கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு அம்மா மினி கிளினிக்கினை அப்புறப்படுத்தியது.

இதற்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் அம்மா மினி கிளினிக் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், சில இடங்களில் சுடுகாட்டை மறித்து ஒரு சிறிய அறையில் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற எதிர் கட்சியின் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி திமுக அரசைகொச்சைப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் இருந்தே தெரிகிறது எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்கள் மீது அக்கறை ஏதும் இல்லையென்று.

எடப்பாடி அவர்கள் தற்போதுள்ள அரசால் தமிழகத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்றும், எந்தெந்த திட்டங்களின் செயல்பாடுகள் எந்தெந்த வகையில் மக்களுக்கு பயன்படுகிறதென்றும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பகையையும் பொல்லாததையும் அறிக்கையாக தயாரித்து நானும் அரசியலில் இருக்கிறேன் பார், என்று சொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு மீண்டும் படுக்கைக்கு போய் விடுகிறார். நேற்று அவர் விடுத்த அறிக்கையில் மக்களை தேடி மருத்துவத்திட்டம் செயல்படவே இல்லை என்றும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடி இலக்கு என்று சொன்னார்கள் ஆனால் இதுவரை 40 லட்சம் பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

அவருக்கு எழுதிக்கொடுத்தவராவது முறையாக அறிந்து தெரிந்து அறிக்கையை வெளியிட வேண்டும் என்கின்ற ஒரு குறைந்தபட்ச அந்த நிலையை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு முறையாக தெரிந்துவிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் அறிக்கையில் உண்மை இருந்திருக்கும்.

சைதாப்பேட்டையில் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டு தொடக்கம் என்கின்ற வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களைத் தந்து அந்த திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்றும் அதன் பயன்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளேன்.

இன்னொரு முறை அவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களைத்தேடி மருத்துவத்தின் முழுமையான தகவலை தருகிறேன்.

தமிழ்நாடு முதலைமைச்சர் மக்களைத்தேடி மருத்துவம் என்னும் உயிர் காக்கும் உன்னத திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் 05.08.2021 அன்று தொடங்கினார். இத்திட்டம் 23.02.2022 இல் 50 லட்சமாவது பயனாளிகள் முதல் முறை சிகிச்சை என்ற வகையிலே செங்கல்பட்டு மாவட்டம், சித்தலப்பாக்கத்தில் முதலமைச்சரால் இத்திட்டம் சிறப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியில் 10.04.2022 அன்று 60 லட்சமாவது பயனாளி முதல் முறை சேவை என்ற வகையில் இத்திட்டம் மீண்டும் சிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 21.06.2022 அன்று நாமக்கல் மாவட்டம் போதைமலையில், கிட்டத்தட்ட 4 கி.மீ செங்குத்தான மலை உச்சிக்கு நடந்தே சென்று அங்குள்ள 75 லட்சமாவது பயனாளிக்கு மக்களைத்தேடி மருத்துவம் என்ற மருந்துப்பெட்டகத்தை நான் வழங்கினேன். இந்த வகையில் 06.08.2022 அன்று சைதாப்பேட்டையில் மக்களைத்தேடி மருத்துவம் இரண்டாம் ஆண்டு இனிதே தொடங்கியது.

இன்னும் கூடுதலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழக முதல்வரின் தீவிர வழிகாட்டுதலின்படி இன்னுயிர் காப்போம் மற்றும் நம்மை காப்போம் 48 என்னும் மகத்தான திட்டத்தின் சேவை மூலம் 06.08.2022 அன்று வரை 1,01,443 நபர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் மூலம் உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அதே போல் வருமுன் காப்போம் திட்டம் 1760 இடங்களில் நடத்தப்பட்டு இந்த ஆண்டும் இத்திட்டம் தொடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை,சில இடங்களில் சுடுகாட்டை மறித்து ஒரு சிறிய அறையில் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்கள் நீதி மய்யம் நிர்வாகிக்கு சின்னத்திரை நடிகை எச்சரிக்கை

சென்னை: கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ பயனாளர்களுக்காக அம்மா மினி கிளினிக் என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் மக்களுக்கு பயன் ஏதுமில்லை என்றும், பல இடங்களில் அம்மா மினிக் கிளினிக் திட்டத்தின் பெயர் பலகை மட்டுமே உள்ளதாக கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு அம்மா மினி கிளினிக்கினை அப்புறப்படுத்தியது.

இதற்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் அம்மா மினி கிளினிக் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், சில இடங்களில் சுடுகாட்டை மறித்து ஒரு சிறிய அறையில் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற எதிர் கட்சியின் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி திமுக அரசைகொச்சைப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் இருந்தே தெரிகிறது எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்கள் மீது அக்கறை ஏதும் இல்லையென்று.

எடப்பாடி அவர்கள் தற்போதுள்ள அரசால் தமிழகத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்றும், எந்தெந்த திட்டங்களின் செயல்பாடுகள் எந்தெந்த வகையில் மக்களுக்கு பயன்படுகிறதென்றும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பகையையும் பொல்லாததையும் அறிக்கையாக தயாரித்து நானும் அரசியலில் இருக்கிறேன் பார், என்று சொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு மீண்டும் படுக்கைக்கு போய் விடுகிறார். நேற்று அவர் விடுத்த அறிக்கையில் மக்களை தேடி மருத்துவத்திட்டம் செயல்படவே இல்லை என்றும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடி இலக்கு என்று சொன்னார்கள் ஆனால் இதுவரை 40 லட்சம் பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

அவருக்கு எழுதிக்கொடுத்தவராவது முறையாக அறிந்து தெரிந்து அறிக்கையை வெளியிட வேண்டும் என்கின்ற ஒரு குறைந்தபட்ச அந்த நிலையை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு முறையாக தெரிந்துவிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் அறிக்கையில் உண்மை இருந்திருக்கும்.

சைதாப்பேட்டையில் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டு தொடக்கம் என்கின்ற வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களைத் தந்து அந்த திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்றும் அதன் பயன்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளேன்.

இன்னொரு முறை அவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களைத்தேடி மருத்துவத்தின் முழுமையான தகவலை தருகிறேன்.

தமிழ்நாடு முதலைமைச்சர் மக்களைத்தேடி மருத்துவம் என்னும் உயிர் காக்கும் உன்னத திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் 05.08.2021 அன்று தொடங்கினார். இத்திட்டம் 23.02.2022 இல் 50 லட்சமாவது பயனாளிகள் முதல் முறை சிகிச்சை என்ற வகையிலே செங்கல்பட்டு மாவட்டம், சித்தலப்பாக்கத்தில் முதலமைச்சரால் இத்திட்டம் சிறப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியில் 10.04.2022 அன்று 60 லட்சமாவது பயனாளி முதல் முறை சேவை என்ற வகையில் இத்திட்டம் மீண்டும் சிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 21.06.2022 அன்று நாமக்கல் மாவட்டம் போதைமலையில், கிட்டத்தட்ட 4 கி.மீ செங்குத்தான மலை உச்சிக்கு நடந்தே சென்று அங்குள்ள 75 லட்சமாவது பயனாளிக்கு மக்களைத்தேடி மருத்துவம் என்ற மருந்துப்பெட்டகத்தை நான் வழங்கினேன். இந்த வகையில் 06.08.2022 அன்று சைதாப்பேட்டையில் மக்களைத்தேடி மருத்துவம் இரண்டாம் ஆண்டு இனிதே தொடங்கியது.

இன்னும் கூடுதலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழக முதல்வரின் தீவிர வழிகாட்டுதலின்படி இன்னுயிர் காப்போம் மற்றும் நம்மை காப்போம் 48 என்னும் மகத்தான திட்டத்தின் சேவை மூலம் 06.08.2022 அன்று வரை 1,01,443 நபர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் மூலம் உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அதே போல் வருமுன் காப்போம் திட்டம் 1760 இடங்களில் நடத்தப்பட்டு இந்த ஆண்டும் இத்திட்டம் தொடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை,சில இடங்களில் சுடுகாட்டை மறித்து ஒரு சிறிய அறையில் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்கள் நீதி மய்யம் நிர்வாகிக்கு சின்னத்திரை நடிகை எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.