ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்கு தள்ளிவைப்பு

author img

By

Published : Jan 21, 2022, 12:48 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய வழக்குகளை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 24) சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது
நகர்புற உள்ளாட்சி தேர்தலை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது

கரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது எனவும், தள்ளிவைக்கக் கோரியும் தமிழ்நாடு அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்றும், 17 விழுக்காடு கரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஐ.சி.யு. அனுமதியும் அதிகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

அதன்பின் நீதிபதிகள், ஜனவரி 27-க்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே எனக் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் மாநிலத்தில் உள்ள நிலையைப் பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2021இல் அனுமதி அளித்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் நான்கு மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசம் ஜனவரி 27ஆம் தேதியுடன் முடிவடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலை கரோனா பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்ப்புறத் தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், பொதுமக்கள் ஆரோக்கியம், சுகாதாரத்தில் அக்கறை கொண்டு தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரிக்கைவைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அன்றைய தினம் இந்த வழக்கு மட்டும் நேரடி விசாரணை முறையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'நகர்ப்புறங்களையும் நமதாக்குவோம், அடுத்த வேள்விக்குத் தயாராவோம்!'

கரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது எனவும், தள்ளிவைக்கக் கோரியும் தமிழ்நாடு அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்றும், 17 விழுக்காடு கரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஐ.சி.யு. அனுமதியும் அதிகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

அதன்பின் நீதிபதிகள், ஜனவரி 27-க்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே எனக் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் மாநிலத்தில் உள்ள நிலையைப் பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2021இல் அனுமதி அளித்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் நான்கு மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசம் ஜனவரி 27ஆம் தேதியுடன் முடிவடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலை கரோனா பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்ப்புறத் தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், பொதுமக்கள் ஆரோக்கியம், சுகாதாரத்தில் அக்கறை கொண்டு தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரிக்கைவைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அன்றைய தினம் இந்த வழக்கு மட்டும் நேரடி விசாரணை முறையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'நகர்ப்புறங்களையும் நமதாக்குவோம், அடுத்த வேள்விக்குத் தயாராவோம்!'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.