ETV Bharat / city

அதிமுக போராட்டம் அறிவித்தால், திமுக அரசு ரெய்டு விடுகின்றது - தாக்கிய ஜெயக்குமார்

author img

By

Published : Sep 13, 2022, 6:32 PM IST

எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம் திமுக அரசு ரெய்டு விடுகின்றது என சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் ஆகியோர் அடையாரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையைப் பார்வையிட்டதன் பின் (செப்.13) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 'விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரே வேலை ரெய்டு. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறது. நாட்டில் ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல பிரச்னைகள் உள்ளன. சிங்காரச் சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள்.

மடிக்கணினி வழங்கவில்லை; தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். பஸ் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி, மின் கட்டணம் என்று பல்வேறு கட்டண உயர்வு பிரச்னையைப் பேச விடாமல் திசை திருப்ப இந்த ரெய்டு. மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்தார். எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு இப்படி ரெய்டு விடுகின்றது.

வடிவேலு காமெடி பாணியில் 'சீப்பை ஒழிச்சு வெச்சா கல்யாணம் நடைபெறாது' என்று அவர்கள் எண்ணக்கூடாது'. மேலும், இன்றைக்கு எஜமான் ஸ்டாலின் தான். அவர் கூறுவதைத்தான் காவல் துறைக்கேட்டு இப்படி ரெய்டு விடுகிறார்கள். அதுமட்டுமின்றி அமைச்சர் மூர்த்தி வீட்டுத்திருமணம், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வீட்டுத்திருமணம்போல நடைபெற்றது. எவ்வளவு செல்வம் அவர்கள் வைத்திருப்பார்கள். பெரிய சீமான்களாக உள்ளனர். விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கைப் பொறுத்தவரை மத்திய அமைச்சர் தான் இதற்குச்சீட்டு வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அளித்த பேட்டி

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரன் பங்கே, இதில் கிடையாது. இதற்கு Essential certificate வழங்குவது தான் மாநில அரசின் வேலை. இதற்கு இறுதி கையெழுத்து இந்திய அரசாங்கம்தான் வழங்க வேண்டும். மாநில அமைச்சருக்கு இதில் பங்கே இல்லை' என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்துவாக இருக்கும் வரை சூத்திரன் தான்.. ஆ.ராசா பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்..

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் ஆகியோர் அடையாரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையைப் பார்வையிட்டதன் பின் (செப்.13) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 'விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரே வேலை ரெய்டு. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறது. நாட்டில் ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல பிரச்னைகள் உள்ளன. சிங்காரச் சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள்.

மடிக்கணினி வழங்கவில்லை; தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். பஸ் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி, மின் கட்டணம் என்று பல்வேறு கட்டண உயர்வு பிரச்னையைப் பேச விடாமல் திசை திருப்ப இந்த ரெய்டு. மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்தார். எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு இப்படி ரெய்டு விடுகின்றது.

வடிவேலு காமெடி பாணியில் 'சீப்பை ஒழிச்சு வெச்சா கல்யாணம் நடைபெறாது' என்று அவர்கள் எண்ணக்கூடாது'. மேலும், இன்றைக்கு எஜமான் ஸ்டாலின் தான். அவர் கூறுவதைத்தான் காவல் துறைக்கேட்டு இப்படி ரெய்டு விடுகிறார்கள். அதுமட்டுமின்றி அமைச்சர் மூர்த்தி வீட்டுத்திருமணம், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வீட்டுத்திருமணம்போல நடைபெற்றது. எவ்வளவு செல்வம் அவர்கள் வைத்திருப்பார்கள். பெரிய சீமான்களாக உள்ளனர். விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கைப் பொறுத்தவரை மத்திய அமைச்சர் தான் இதற்குச்சீட்டு வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அளித்த பேட்டி

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரன் பங்கே, இதில் கிடையாது. இதற்கு Essential certificate வழங்குவது தான் மாநில அரசின் வேலை. இதற்கு இறுதி கையெழுத்து இந்திய அரசாங்கம்தான் வழங்க வேண்டும். மாநில அமைச்சருக்கு இதில் பங்கே இல்லை' என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்துவாக இருக்கும் வரை சூத்திரன் தான்.. ஆ.ராசா பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.