ETV Bharat / city

'ஜல் சக்தி அபியான்' திட்டத்தால் நாடு வளம்பெறுமா?

இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'ஜல் சக்தி அபியான்' திட்டம் எந்த அளவுக்கு பயன் அளிக்கும்? இதனால் நாட்டின் வளம் செழிப்படையுமா? இது தொடர்பாக விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

Jal Jeevan Mission
Jal Jeevan Mission
author img

By

Published : Jan 4, 2020, 11:55 AM IST

நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள 1,592 வட்டாரங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தும் வகையில் 'ஜல் சக்தி அபியான்' திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்த உள்ள பகுதிகளில் நீர்வளத்தைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்வதுமே இதன் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு நெறிமுறைகளை வகுக்கக் காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில், அவருடைய பிறந்தநாளில், 'அடல் புஜல் யோஜனா' என்ற பெயரில் புதிய திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 7 மாநிலங்களில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 8300 கிராமங்கள், இந்தத் திட்டத்தால் பயனடைய உள்ளன.

இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 விழுக்காடு நிதி, உலக வங்கியின் மூலம் மாநிலங்களுக்கு கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடையும் மாநிலங்களைத் தேர்வு செய்யும் முன், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விருப்பம், கருத்துகள் கேட்டு திட்டத்தை செயல்படுத்தத் தயாராக உள்ளனவா? என்பதை அறிந்த பின்னரே பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த நாட்டின் 72 விழுக்காடு நீராதாரங்கள் தற்போது காணாமல் போய்விட்டதாக "இந்தியாவின் நீர் மனிதர்" என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நிலத்தடி நீர்மட்ட சரிவு குறித்து, அமெரிக்காவின் நாசா நிறுவனமும் நான்கு வருடங்களுக்கு முன் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஏரியான மேட் ஏரியின் மொத்த நீர்க் கொள்ளளவைவிட இரு மடங்குக்கும் மேலான நிலத்தடி நீரை இந்தியா இழந்துள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்திருந்தும், தண்ணீரை வீணாக்குவது குறைந்தபாடில்லை என்றும் ராஜேந்திர சிங் வினவியுள்ளார்.

நாடு சுதந்திரமடைந்தபோது, தனி நபர் ஒருவருக்கு சராசரியாக 6,042 கியூபிக் மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது இதில் கால் பங்குகூட கிடைக்கவில்லை. தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம், இதுவரையிலும் இதற்கு தீர்வு காண யாரும் உரிய அக்கறை செலுத்தாதது என்றே கூறலாம். நாட்டில், மாசுக்கட்டுப்பாடு திட்டம் கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் அத்திட்டம் வெற்றி பெறவில்லை. இப்படி நீர் இழப்பைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், நீர் மேலாண்மையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததுமே இயற்கை நீர் வளங்களை பாதுகாக்க முடியாமல் போனதற்கு காரணம் என்று மத்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் தெரியவந்தது.

Jal Jeevan Mission
Jal Jeevan Mission

இதன் விளைவாக நிலத்தடி நீர் விவகாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 160 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறிவிட்டதும், 230 மாவட்டங்களில் ஃபுளோரைடு அரக்கன், நீரின் தன்மையை மாற்றிவிட்டதும் தெரியவந்தது. நீர் வளத்தை பாதுகாக்க, பல்வேறு மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. 'மிஷன் காகதியா' என்ற பெயரில் தெலங்கானா அரசும், 'நீரு செட்டு' என்ற பெயரில் ஆந்திராவும், 'சீஃப் மினிஸ்டர் ஜல் அபியான்' என்ற திட்டம் ராஜஸ்தானிலும், 'சுசாலம் சுஃபாலம் யோஜனா' என குஜராத் அரசும் என பெயர் வைத்து திட்டங்களை செயல்படுத்திவருகின்றன.

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான நீரை பாதுகாப்பாக வழங்குவது என்பது எளிதான ஒன்றல்ல. நாட்டில் பாசனத்துக்கான நீர் தேவைக்கும், தற்போது கிடைக்கப்பெறும் நீரின் அளவுக்கும் இடையேயான இடைவெளி 43 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் 14 கோடி குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்க 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, ஜல் ஜீவன் மிஷன் கணக்கிட்டுள்ளது. மேலும், தண்ணீர் பிரச்னைகளை எதிர்கொள்ள மத்திய நீர்வளத் துறையையும், மத்திய அரசின் நிலத்தடி நீர் விவகாரங்களுக்கான அமைப்பையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என மிஹிர் ஷா கமிட்டியும் பரிந்துரை செய்தது.

எனவே, நிலத்தடி நீராதாரம் இல்லாத பகுதிகளில் உள்ள விவசாயிகள் தண்ணீர் செலவை மிச்சம் பிடிக்கும் வகையிலான பயிர்களை சாகுபடி செய்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கான புதிய யுக்திகளை கையாள உரிய வழிகாட்டுதல்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும் நிலத்தடி நீருக்கான ஆதாரங்களைக் கண்காணிப்பதுடன், அதனை நிவர்த்தி செய்வது குறித்து அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றும்பட்சத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள "அடல் புஜால் யோஜனா" திட்டத்தால் நாடு வளம்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள 1,592 வட்டாரங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தும் வகையில் 'ஜல் சக்தி அபியான்' திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்த உள்ள பகுதிகளில் நீர்வளத்தைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்வதுமே இதன் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு நெறிமுறைகளை வகுக்கக் காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில், அவருடைய பிறந்தநாளில், 'அடல் புஜல் யோஜனா' என்ற பெயரில் புதிய திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 7 மாநிலங்களில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 8300 கிராமங்கள், இந்தத் திட்டத்தால் பயனடைய உள்ளன.

இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 விழுக்காடு நிதி, உலக வங்கியின் மூலம் மாநிலங்களுக்கு கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடையும் மாநிலங்களைத் தேர்வு செய்யும் முன், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விருப்பம், கருத்துகள் கேட்டு திட்டத்தை செயல்படுத்தத் தயாராக உள்ளனவா? என்பதை அறிந்த பின்னரே பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த நாட்டின் 72 விழுக்காடு நீராதாரங்கள் தற்போது காணாமல் போய்விட்டதாக "இந்தியாவின் நீர் மனிதர்" என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நிலத்தடி நீர்மட்ட சரிவு குறித்து, அமெரிக்காவின் நாசா நிறுவனமும் நான்கு வருடங்களுக்கு முன் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஏரியான மேட் ஏரியின் மொத்த நீர்க் கொள்ளளவைவிட இரு மடங்குக்கும் மேலான நிலத்தடி நீரை இந்தியா இழந்துள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்திருந்தும், தண்ணீரை வீணாக்குவது குறைந்தபாடில்லை என்றும் ராஜேந்திர சிங் வினவியுள்ளார்.

நாடு சுதந்திரமடைந்தபோது, தனி நபர் ஒருவருக்கு சராசரியாக 6,042 கியூபிக் மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது இதில் கால் பங்குகூட கிடைக்கவில்லை. தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம், இதுவரையிலும் இதற்கு தீர்வு காண யாரும் உரிய அக்கறை செலுத்தாதது என்றே கூறலாம். நாட்டில், மாசுக்கட்டுப்பாடு திட்டம் கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் அத்திட்டம் வெற்றி பெறவில்லை. இப்படி நீர் இழப்பைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், நீர் மேலாண்மையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததுமே இயற்கை நீர் வளங்களை பாதுகாக்க முடியாமல் போனதற்கு காரணம் என்று மத்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் தெரியவந்தது.

Jal Jeevan Mission
Jal Jeevan Mission

இதன் விளைவாக நிலத்தடி நீர் விவகாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 160 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறிவிட்டதும், 230 மாவட்டங்களில் ஃபுளோரைடு அரக்கன், நீரின் தன்மையை மாற்றிவிட்டதும் தெரியவந்தது. நீர் வளத்தை பாதுகாக்க, பல்வேறு மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. 'மிஷன் காகதியா' என்ற பெயரில் தெலங்கானா அரசும், 'நீரு செட்டு' என்ற பெயரில் ஆந்திராவும், 'சீஃப் மினிஸ்டர் ஜல் அபியான்' என்ற திட்டம் ராஜஸ்தானிலும், 'சுசாலம் சுஃபாலம் யோஜனா' என குஜராத் அரசும் என பெயர் வைத்து திட்டங்களை செயல்படுத்திவருகின்றன.

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான நீரை பாதுகாப்பாக வழங்குவது என்பது எளிதான ஒன்றல்ல. நாட்டில் பாசனத்துக்கான நீர் தேவைக்கும், தற்போது கிடைக்கப்பெறும் நீரின் அளவுக்கும் இடையேயான இடைவெளி 43 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் 14 கோடி குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்க 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, ஜல் ஜீவன் மிஷன் கணக்கிட்டுள்ளது. மேலும், தண்ணீர் பிரச்னைகளை எதிர்கொள்ள மத்திய நீர்வளத் துறையையும், மத்திய அரசின் நிலத்தடி நீர் விவகாரங்களுக்கான அமைப்பையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என மிஹிர் ஷா கமிட்டியும் பரிந்துரை செய்தது.

எனவே, நிலத்தடி நீராதாரம் இல்லாத பகுதிகளில் உள்ள விவசாயிகள் தண்ணீர் செலவை மிச்சம் பிடிக்கும் வகையிலான பயிர்களை சாகுபடி செய்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கான புதிய யுக்திகளை கையாள உரிய வழிகாட்டுதல்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும் நிலத்தடி நீருக்கான ஆதாரங்களைக் கண்காணிப்பதுடன், அதனை நிவர்த்தி செய்வது குறித்து அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றும்பட்சத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள "அடல் புஜால் யோஜனா" திட்டத்தால் நாடு வளம்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Intro:Body:

மழை நீர் சேகரிப்பு... & "அடல் புஜல் யோஜனா"



----------------------------------------



மழை நீரை பயனுள்ள வகையில் சேகரிப்பதில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. உலகளாவிய குறியீட்டின்படி, மொத்தம் பொழியும் மழை நீரில் வெறும் 8 சதவீதத்தை மட்டுமே நாம் சேமிப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், நிலத்தடி நீரையும், முன் யோசனையின்றி பெருமளவு பயன்படுத்தியதால், இந்தியாவில் நிலத்தடி நீர்மட்ட நிலவரம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் இயற்கை நீர் வள ஆதாரங்களை பாதுகாக்கும் பொருட்டு, "ஜல் சக்தி அபியான்" என்ற பெயரில் முக்கியத் திட்டம் ஒன்றை ஆறு வாரங்களுக்கு முன் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள 1592 வட்டாரங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல் படுத்தப்படவுள்ள பகுதிகளில் நீர் வளத்தை பாதுகாக்கவும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதுமே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு வித்திட்டு நெறிமுறைகளை வகுக்க காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில், அவருடைய பிறந்த நாளில், "அடல் புஜால் யோஜனா" என்ற பெயரில் புதிய திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு 7 மாநிலங்களில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில், 78 மாவட்டங்களில் அடங்கிய 8300 கிராமங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைய உள்ளன. இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை 5 ஆண்டுகளில் மேம்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத நிதி உலக வங்கியின் மூலம் மாநிலங்களுக்கு கடனாக வழங்கப்படுவதுடன், மீதித் தொகையை இந்த புதிய திட்டத்தின் மூலம், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக வழங்கப்படும்.இத்திட்டத்தில் பலனடையும் மாநிலங்களை தேர்வு செய்யும் முன், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விருப்பம், கருத்துக்களையும், திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளனவா? என்பதை அறிந்த பின்னரே பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் பஞ்சாப் மாநிலம் கொடுத்த விவரங்களும்,  தெரிவித்த கருத்துக்களும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பஞ்சாபில் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் மோசமாக இருக்கும் போது, பதான்கோட் மற்றும் முக்த்சார் ஆகிய இரு மாவட்டங்களை தவிர்த்து 20 மாவட்டங்களை அடல் புஜல் யோஜனா திட்டத்தில் சேர்க்காதது ஏன்? என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கேள்வி எழுப்பினார். இந்தத் திட்டத்தில் அதிகம் பகுதிகளை சேர்க்கும் பட்சத்தில், கூடுதல் நிதி தேவைப்பட்டு திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே தான், நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்தும் இயற்கையான மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க போராடுவது மட்டுமின்றி, அனாவசிய பயன்பாட்டைக் குறைத்து நீரைச் சிக்கனம் செய்ய வேண்டியதும் அவசியம் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தற்போதைய சூழலில், குறைந்த நீர்ச் செலவில் விளைவிக்கக் கூடிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் அறிவுறுத்தலாகவும் உள்ளது.







நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கு முக்கிய காரணமாக  இருந்த நாட்டின் 72 சதவீத நீராதாரங்கள் தற்போது காணாமல் போய் விட்டதாக "இந்தியாவின் நீர் மனிதர்" என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிலத்தடி நீர்மட்ட சரிவு குறித்து, அமெரிக்காவின் நாசா நிறுவனமும் நான்கு வருடங்களுக்கு முன்பே அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய ஏரியான மேட் ஏரியின் மொத்த நீர்க் கொள்ளளவை விட இரு மடங்குக்கும் மேலான நிலத்தடி நீரை இந்தியா இழந்துள்ளதாக நாசா எச்சரிக்கையாக கூறியிருந்தும், தண்ணீரை அனாவசியமாக வீணடிப்பது இன்னும் குறைந்தபாடில்லை என்றே கூறலாம்.







நாடு சுதந்திரமடைந்த போது,  தனி நபர் ஒருவருக்கு சராசரியாக 6042 கியூபிக் மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது இதில் கால் பங்கு கூட கிடைத்தபாடில்லை. வரும் நாட்களில் மேலும் குறைந்து கொண்டே போகும் நிலைதான் உள்ளது. தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும், சர்ச்சை தொடர்வதற்கும் காரணம், இதுவரையிலும் இதற்கு தீர்வு காண யாரும் உரிய அக்கறை செலுத்தாதது தான் என்றே கூறலாம். நாட்டில், மாசுக்கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் அத்திட்டம் வெற்றி பெறவில்லை. இப்படி நீர் இழப்பை தடுக்க உரிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், நீர் மேலாண்மையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததுமே இயற்கை நீர் வளங்களை பாதுகாக்க முடியாமல் போனதற்கு காரணம் என்று மத்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தனது அறிக்கையில் கூறியது. இதன் விளைவாக நிலத்தடி நீர் விவகாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 160 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்புத் தன்மையாக மாறிவிட்பதும், 230 மாவட்டங்களில் புளோரைடு அரக்கன், நீரின் தன்மையையே மாற்றி விட்டதும் தெரிய வந்தது. நீர் வளத்தை பாதுகாக்க, பல்வேறு மாநில அரசுகள், பல பெயர்களில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 'மிஷன் காகதியா' என்ற பெயரில் தெலுங்கானா அரசும், 'நீரு செட்டு' என்ற பெயரில் ஆந்திராவும், 'சீஃப் மினிஸ்டர் ஜல் அபியான்' என்ற திட்டம் ராஜஸ்தானிலும், 'சுசாலம் சுஃபாலம் யோஜனா' என குஜராத் அரசும் விதவிதமான பெயர் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், தேசிய அளவில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது பெரும் குறையாக இருந்தது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கூட்டு முயற்சியாக செயல்பட்டால் மட்டுமே, நாட்டில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான உன்னதமான ஒரு புதிய வழி பிறக்கும் என்பது நிச்சயம்.







நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான நீரை பாதுகாப்பாக வைத்து அனைவருக்கும் வழங்குவது என்பது எளிதான ஒன்றல்ல. நாட்டில் பாசனத்திற்கான நீர் தேவைக்கும், தற்போது கிடைக்கப்பெறும் நீரின் அளவுக்கும் இடையேயான இடைவெளி, 43 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக  மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பற்றாக்குறை  அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் 14 கோடி குடும்பத்தினருக்கு தண்ணீர் வழங்க மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவாகும் ஜல் ஜீவன் மிஷன் கணக்கிட்டுள்ளது. தற்போதைய நிலையில்  இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசால் சமாளிப்பது என்பது எளிதானதல்ல. மத்திய, மாநில அரசுகள் இந்தச் செலவை சமமாக பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்.மேலும், தண்ணீர் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள மத்திய நீர்வளத் துறையையும், மத்திய அரசின் நிலத்தடி நீர் விவகாரங்களுக்கான அமைப்பையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னரே மிஹிர் ஷா கமிட்டியும் பரிந்துரை செய்திருந்தது.  பிரதமர் மோடியும், நிலத்தடி நீராதாரம் மங்கிப்போன பகுதிகளில் உள்ள விவசாயிகள் தண்ணீர் செலவை மிச்சம் பிடிக்கும் வகையிலான பயிர்களை சாகுபடி செய்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அதற்கான புதிய யுக்திகளை கையாள உரிய வழிகாட்டுதல்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள், நிலத்தடி நீர்மட்டம்  சரிந்து விடாமல் இருக்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சீனாவோ, தன் நாட்டில் உள்ள நீர் நிலைகளில் ஒன்று கூட அசுத்தமடைந்து விடக் கூடாது என நினைக்கிறது. எனவே நீர் நிலைகள் பராமரிப்பு பணிக்காக மட்டுமே 12 மில்லியன் பேரை பராமரிப்பாளர்களாக நியமித்துள்ளது. இது போல் மேலும் சில நாடுகளும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க புதுமையான வழிமுறைகளை கையாள்கின்றன. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறிய சாலைகள் அமைக்கும் போது, மழை நீர் வீணாகாமல், அதனை முறையாக சேகரிக்கும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன .இதே போன்று, நம் நாட்டிலும் ஒவ்வொரு துளி நீரின் அருமை தெரியச் செய்யும் வகையில் தேசிய அளவில் ஒரு யுத்தியை உருவாக்கும் பட்சத்தில், பயிர்கள் விளைச்சலும் அமோகமாகும். துளி துளியாக ஒவ்வொரு துளியாக சேர்ந்தால் கடலாக மாறும் என்று கூறப்படுவதுண்டு. அது போல் நாமும் சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமிக்கும் பட்சத்தில் நாட்டில் தண்ணீர் பிரச்னையை காணாமல் போக செய்ய முடியும். மேலும் நிலத்தடி நீருக்கான ஆதாரங்களைக் கண்காணிப்பதுடன், அதனை நிவர்த்தி செய்வது குறித்து அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசும் ஒரு வழி காட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றும் பட்சத்தில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள "அடல் புஜால் யோஜனா" திட்டம் நாடு முழுமைக்கும் நல்ல பலனை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.