ETV Bharat / city

’மருத்துவர்கள், மருத்துவமனை குறித்து தவறான செய்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது’

author img

By

Published : Aug 8, 2020, 9:31 AM IST

Updated : Aug 11, 2020, 4:43 PM IST

சென்னை: மருத்துவர்கள், மருத்துவமனை குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது என, தனியார் மருத்துவமனைகளுக்கான இந்திய சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் குருசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய உடல்நல சேவை வழங்குநர் சங்க மாநிலத் தலைவர் குருசங்கர்
இந்திய உடல்நல சேவை வழங்குநர் சங்க மாநிலத் தலைவர் குருசங்கர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர். அதனால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே வைரஸ் தொற்று உள்ளவர்கள் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று உள்ள ஒருவர் டெல்லியிலிருந்து கெளகாத்திக்கு பாசிட்டிவ் சான்றிதழுடன் பயணம் செய்துள்ளார்.

அதன்மூலம் அவர் சந்தித்த நபர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற அலட்சியப்போக்கு கூடாது. அதேபோல், கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சமூக வலைதளங்களில் மருத்துவர்கள் பற்றியும், மருத்துவமனைகள் பற்றியும் தவறான செய்திகள், வதந்திகள் பரப்பப்படுகின்றன.

கரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த தருணத்தில் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவறாக சித்தரிப்பது கவலை அளிக்கிறது. அது தேவையில்லாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவமனைகள் சட்ட ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கினால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளுக்கான இந்திய சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் குருசங்கர்

இதையும் படிங்க: 'பிளாஸ்மா சிகிச்சையால் எவ்வித பலனும் இல்லை' - எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர். அதனால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே வைரஸ் தொற்று உள்ளவர்கள் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று உள்ள ஒருவர் டெல்லியிலிருந்து கெளகாத்திக்கு பாசிட்டிவ் சான்றிதழுடன் பயணம் செய்துள்ளார்.

அதன்மூலம் அவர் சந்தித்த நபர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற அலட்சியப்போக்கு கூடாது. அதேபோல், கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சமூக வலைதளங்களில் மருத்துவர்கள் பற்றியும், மருத்துவமனைகள் பற்றியும் தவறான செய்திகள், வதந்திகள் பரப்பப்படுகின்றன.

கரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த தருணத்தில் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவறாக சித்தரிப்பது கவலை அளிக்கிறது. அது தேவையில்லாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவமனைகள் சட்ட ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கினால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளுக்கான இந்திய சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் குருசங்கர்

இதையும் படிங்க: 'பிளாஸ்மா சிகிச்சையால் எவ்வித பலனும் இல்லை' - எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

Last Updated : Aug 11, 2020, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.