ETV Bharat / city

விவாகரத்து கோரிய வழக்கில் கணவரை வீட்டை விட்டு வெளியேற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விவாகரத்து கோரிய மனைவி வீட்டில் அமைதியாக வாழ வேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டை விட்டு வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
author img

By

Published : Aug 16, 2022, 10:07 PM IST

சென்னை: தொழிலதிபரான தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கோரி கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொள்ளலாம் என்றும் கணவர் மனைவியை துன்புறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, கணவரை வெளியேற்ற உத்தரவிடக் கோரி அப்பெண் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, ஒரே வீட்டில் இருக்கும் போது கணவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பெண் அச்சம் தெரிவிப்பதால் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அப்பெண்ணின் கணவர் இரு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லை என்றால் காவல்துறை உதவியோடு வெளியேற்றப்படுவார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மனைவி வேலைக்கு செல்வதை சகிக்க முடியாத கணவன், மனைவிக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் எனும் போது அவரை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்க முடியாது எனவும் குடும்பத்தில் அமைதியை பேண கணவரை வெளியேறும்படி உத்தரவிடலாம் எனக் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: தொழிலதிபரான தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கோரி கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொள்ளலாம் என்றும் கணவர் மனைவியை துன்புறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, கணவரை வெளியேற்ற உத்தரவிடக் கோரி அப்பெண் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, ஒரே வீட்டில் இருக்கும் போது கணவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பெண் அச்சம் தெரிவிப்பதால் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அப்பெண்ணின் கணவர் இரு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லை என்றால் காவல்துறை உதவியோடு வெளியேற்றப்படுவார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மனைவி வேலைக்கு செல்வதை சகிக்க முடியாத கணவன், மனைவிக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் எனும் போது அவரை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்க முடியாது எனவும் குடும்பத்தில் அமைதியை பேண கணவரை வெளியேறும்படி உத்தரவிடலாம் எனக் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.