சென்னை: குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டை பிள்ளையார் கோயில் 1ஆவது குறுக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம்(59), மஞ்சுளா(50) தம்பதிக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். அதில் மூத்த மகள் வசந்தி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, மோசஸ் என்பவருடன் உறவில் இருந்துவந்துள்ளார்.
இந்த நிலையில் மோசஸ் மதுஅருந்திவிட்டு வசந்தியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வசந்தி மோசஸை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மோசஸ் தன்னுடன் வாழவில்லை என்றால் உன்னுடை தாய், தந்தையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ஆனால் வசந்தி அவருடன் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் அவரது கூட்டாளி ஒருவருடன் சென்று ஆறுமுகம் மற்றும் மஞ்சுளா இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிட்லபாக்கம் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த மோசஸ் மற்றும் அவருடன் இருந்த நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்தில் மனைவியிடம் தகாத முறையில் நடந்தவரை தட்டிக்கேட்ட கணவர் - காவலர் எனக்கூறி மிரட்டிய ஆசாமி