ETV Bharat / city

சாதி மறுப்புத் திருமணம்: இளைஞர் வெட்டிக் கொலை

author img

By

Published : Nov 5, 2019, 1:15 PM IST

சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக்கொலை

பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முரளி (28) அருகில் உள்ள தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் முரளியை சரமாரியாக வெட்டினர்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவல் அறிந்த கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முரளி ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ள நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. இதனையடுத்து கொலையாளிகளைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முரளி (28) அருகில் உள்ள தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் முரளியை சரமாரியாக வெட்டினர்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவல் அறிந்த கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முரளி ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ள நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. இதனையடுத்து கொலையாளிகளைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Intro:Body:சாதி மாற்றி திருமணம் செய்த இளைஞர் வெட்டி கொலை.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முரளி(28) அருகில் உள்ள தேனீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 நபர்கள் முரளியை சரமாரியாக வெட்டினர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் முரளியை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

தகவல் அறிந்த கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முரளி மேலாதிக்க சாதியை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ள நிலையில் முரளி வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் உடுமலை சங்கரை கொலை செய்ததுபோல் ஆவனக்கொலையா என போலீசார் விசாரணை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.