ETV Bharat / city

சென்னைக்கு கூடுதல் தண்ணீர் விநியோகம் - நீதிபதிகள் உத்தரவு

சென்னை: ஊரடங்கு தளர்வையடுத்து மக்கள் சென்னைக்குத் திரும்பிவருவதால், கூடுதலாக தண்ணீர் விநியோகம்செய்வது குறித்து பரிசீலிக்க குடிநீர் வழங்கல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

supply
supply
author img

By

Published : Sep 7, 2020, 3:09 PM IST

கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மக்கள் தங்கள் கைகளை கழுவுவதற்கும், அத்தியாவசியத் தேவைக்குமான தண்ணீரை விநியோகிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், “ சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்துவருகிறது. எனவே, கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் மூன்று மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் “ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தரப்பில், ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னைக்கு ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது எனவும், கரோனா ஊரடங்கிலும் மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தரப்பில், ஊரடங்கு தளர்வு காரணமாக சொந்த ஊரிலிருந்து அதிகளவில் மக்கள் சென்னைக்குத் திரும்பிவருவதால், 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சென்னை மக்களுக்கு கூடுதலாகத் தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்றத்தில் இன்றுமுதல் நேரடி விசாரணை!

கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மக்கள் தங்கள் கைகளை கழுவுவதற்கும், அத்தியாவசியத் தேவைக்குமான தண்ணீரை விநியோகிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், “ சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்துவருகிறது. எனவே, கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் மூன்று மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் “ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தரப்பில், ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னைக்கு ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது எனவும், கரோனா ஊரடங்கிலும் மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தரப்பில், ஊரடங்கு தளர்வு காரணமாக சொந்த ஊரிலிருந்து அதிகளவில் மக்கள் சென்னைக்குத் திரும்பிவருவதால், 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சென்னை மக்களுக்கு கூடுதலாகத் தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்றத்தில் இன்றுமுதல் நேரடி விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.