ETV Bharat / city

மாநகராட்சி குழந்தைகள் மையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு குழந்தைகள் மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Sep 30, 2021, 7:29 AM IST

iraianbu inspection
iraianbu inspection

சென்னை: சென்னை மாவட்டத்தில் 1806 குழந்தைகள் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 87,322 குழந்தைகள், 13,466 கர்ப்பிணிகள் மற்றும் 10,388 பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 1,11,176 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று துவாரகா நகர், மெக்காபுரம், மற்றும் மைலாப்பூர் பஜார் சாலை ஆகிய இடங்களில் உள்ள மூன்று குழந்தைகள் மையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தலைமைச் செயலாளர் குழந்தைகள் மையங்களில் வழங்கப்படும் முட்டையுடன் கூடிய சூடான மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதைப் பார்வையிட்டார். மேலும், இன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி புலாவ் சாதத்தினை உண்டு தரத்தினை சரிபார்த்தார். குழந்தைகளுடன் உரையாடி, மையத்தில் வழங்கப்படும் முன் பருவக் கல்வி குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கரோனா பெருந்தொற்றினை தவிர்த்திடும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மையங்களில் கடைப்பிடிக்கவும், குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை: சென்னை மாவட்டத்தில் 1806 குழந்தைகள் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 87,322 குழந்தைகள், 13,466 கர்ப்பிணிகள் மற்றும் 10,388 பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 1,11,176 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று துவாரகா நகர், மெக்காபுரம், மற்றும் மைலாப்பூர் பஜார் சாலை ஆகிய இடங்களில் உள்ள மூன்று குழந்தைகள் மையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தலைமைச் செயலாளர் குழந்தைகள் மையங்களில் வழங்கப்படும் முட்டையுடன் கூடிய சூடான மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதைப் பார்வையிட்டார். மேலும், இன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி புலாவ் சாதத்தினை உண்டு தரத்தினை சரிபார்த்தார். குழந்தைகளுடன் உரையாடி, மையத்தில் வழங்கப்படும் முன் பருவக் கல்வி குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கரோனா பெருந்தொற்றினை தவிர்த்திடும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மையங்களில் கடைப்பிடிக்கவும், குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.