ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm

author img

By

Published : Aug 10, 2021, 1:13 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

ஆகஸ்ட் 13இல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பாதுகாப்புப் பணி: உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் திருட்டு

முதலமைச்சர் பாதுகாப்புப் பணியிலிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்... சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை... அறிக்கைக்கு உத்தரவு

அரசு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சாஸ்திரா பல்கலைக்கழகத்திடமிருந்து, அந்நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நகை திருடிய பெண்கள்: சிசிடிவி உதவியுடன் பிடித்த காவல் துறை

மூதாட்டிகளிடம் பாசமாகப் பேசி கவனத்தை திசை திருப்பி நகை திருடிய பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம் - தற்கொலைக்கு முயன்ற குடும்பம்!

சீர்காழி அருகே 20 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் மனமுடைந்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை சிறுவன் வழக்கு: சிபிசிஐடிக்கு விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்திற்கு உத்தரவு

புதுக்கோட்டை சிறுவன் காணாமல்போன வழக்கில் அவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் ஆகியவை பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்களை ஆதார் ஆணையம் சிபிசிஐடி காவல் துறையினருக்கு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவை இளைஞரணிச் செயலாளர் வீட்டிலும் ரெய்டு

கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணிச் செயலாளருமான இ. சந்திரசேகரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துகிறது.

ரெய்டுக்கு பதில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றலாம் - பொள்ளாச்சி ஜெயராமன்

ரெய்டு நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை செய்யலாம் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

ஜம்மு காஷ்மீரின் பிரசித்திப் பெற்ற கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு செய்தார்.

ஆகஸ்ட் 13இல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பாதுகாப்புப் பணி: உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் திருட்டு

முதலமைச்சர் பாதுகாப்புப் பணியிலிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்... சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை... அறிக்கைக்கு உத்தரவு

அரசு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சாஸ்திரா பல்கலைக்கழகத்திடமிருந்து, அந்நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நகை திருடிய பெண்கள்: சிசிடிவி உதவியுடன் பிடித்த காவல் துறை

மூதாட்டிகளிடம் பாசமாகப் பேசி கவனத்தை திசை திருப்பி நகை திருடிய பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம் - தற்கொலைக்கு முயன்ற குடும்பம்!

சீர்காழி அருகே 20 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் மனமுடைந்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை சிறுவன் வழக்கு: சிபிசிஐடிக்கு விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்திற்கு உத்தரவு

புதுக்கோட்டை சிறுவன் காணாமல்போன வழக்கில் அவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் ஆகியவை பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்களை ஆதார் ஆணையம் சிபிசிஐடி காவல் துறையினருக்கு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவை இளைஞரணிச் செயலாளர் வீட்டிலும் ரெய்டு

கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணிச் செயலாளருமான இ. சந்திரசேகரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துகிறது.

ரெய்டுக்கு பதில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றலாம் - பொள்ளாச்சி ஜெயராமன்

ரெய்டு நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை செய்யலாம் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

ஜம்மு காஷ்மீரின் பிரசித்திப் பெற்ற கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.