ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

author img

By

Published : May 20, 2021, 6:55 PM IST

Updated : May 20, 2021, 7:03 PM IST

E TV BHARAT Top 10 news @ 7PM ON MAY 20
E TV BHARAT Top 10 news @ 7PM ON MAY 20

எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கரோனா வரயிருக்கிறது;முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்துங்கள் - சீமான்

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கரோனா மூன்றாவது அலையைப் பரவாமல், தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்!

திருப்பூர் நேதாஜி ஜவுளிப் பூங்காவில், 18 முதல் 44 வயரை வரை உள்ள பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாமினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 20) தொடங்கி வைத்தார்.

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் காவல் துறையில் தொடர் மரணங்கள்.. இதுவரை 108 போலீசார் உயிரிழப்பு..

கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது முதல் தற்போதுவரை தமிழ்நாடு காவல் துறையில் 108 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அரசின் ஆணைகள் சரியாக இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறதா - நீதிமன்றம் கேள்வி?

தமிழ்நாடு அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என விளக்கமளிக்க மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு அமரர் ஊர்திகள் வழங்கிய வானதி சீனிவாசன்

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் இரண்டு அமரர் ஊர்திகளை வழங்கியுள்ளார்.

நயன்தாராவின் தடுப்பூசி: சர்ச்சையும், விளக்கமும்!

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், வெளியான புகைப்படம் விழிப்புணர்வுக்காக பகிரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

’பேசக்கூடாது என்றால் எதற்கு கூட்டம்...’ - பிரதமர் மோடிக்கு மம்தா சுளீர் கேள்வி!

பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேச வாய்ப்பளிக்கப்படுவதில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்' - பிரதமருக்கு சோனியா கடிதம்

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கரோனா வரயிருக்கிறது;முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்துங்கள் - சீமான்

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கரோனா மூன்றாவது அலையைப் பரவாமல், தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்!

திருப்பூர் நேதாஜி ஜவுளிப் பூங்காவில், 18 முதல் 44 வயரை வரை உள்ள பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாமினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 20) தொடங்கி வைத்தார்.

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் காவல் துறையில் தொடர் மரணங்கள்.. இதுவரை 108 போலீசார் உயிரிழப்பு..

கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது முதல் தற்போதுவரை தமிழ்நாடு காவல் துறையில் 108 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அரசின் ஆணைகள் சரியாக இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறதா - நீதிமன்றம் கேள்வி?

தமிழ்நாடு அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என விளக்கமளிக்க மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு அமரர் ஊர்திகள் வழங்கிய வானதி சீனிவாசன்

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் இரண்டு அமரர் ஊர்திகளை வழங்கியுள்ளார்.

நயன்தாராவின் தடுப்பூசி: சர்ச்சையும், விளக்கமும்!

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், வெளியான புகைப்படம் விழிப்புணர்வுக்காக பகிரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

’பேசக்கூடாது என்றால் எதற்கு கூட்டம்...’ - பிரதமர் மோடிக்கு மம்தா சுளீர் கேள்வி!

பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேச வாய்ப்பளிக்கப்படுவதில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்' - பிரதமருக்கு சோனியா கடிதம்

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Last Updated : May 20, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.