ETV Bharat / city

'தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டிசிவர் மருந்து' - மருத்துவர் சங்கம் வரவேற்பு

author img

By

Published : May 16, 2021, 9:08 PM IST

ரெம்டிசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளே நேரடியாக பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ள திட்டம் வரவேற்புக்குரியது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

'தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டிசிவர் மருந்து' - மருத்துவர் சங்கம் வரவேற்பு
'தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டிசிவர் மருந்து' - மருத்துவர் சங்கம் வரவேற்பு

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "அரசு மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள், 2,000 தொழில்நுட்பப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு புதிதாக நியமிக்கவிருப்பது வரவேற்புக்குரியது. ரெம்டிசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ள திட்டமும் வரவேற்புக்குரியது.

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. நாள்தோறும் புதிய படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. நோயாளிகள், படுக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் கடும் பணிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்திட வேண்டும். போர்க்கால அடிப்படையில் பணி நியமனங்களை செய்திட வேண்டும்.

ஏற்கனவே எம்.ஆர்.பி தேர்வு எழுதி முடித்து பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மீதமுள்ள மருத்துவர்களுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும். மேலும் படித்து முடித்து வேலைக்காக ஏறத்தாழ 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை மாத ஊதியம் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து நியமிக்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களையும் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களை பணி அமர்த்திய பிறகும் தேவை எழும் நிலையில், மருத்துவ மாணவர்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல் செவிலியர்களையும் ஊழியர்களையும் நியமிக்க வேண்டும்.

கரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் சிலருக்கு கடந்த 4 முதல் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் இன்றியே உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.

பல மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் காலதாமதமாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியம் வழங்கிட இரண்டு, மூன்று மாதங்கள் வரை காலதாமதமாகிறது. இதனால், செலவுகளுக்கு பணம் இல்லாமல் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.

மருத்துவப் படுக்கைகள் பற்றாக்குறையை போக்கிட உடனடியாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து படுக்கை வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நூறு படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளையும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா அல்லாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டீசிவிர் உள்ளிட்ட மருந்துகளின் தட்டுப்பாட்டையும், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டையும் போக்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்புக்குரியது. அதை விரைவுபடுத்த வேண்டும். இப்பிரச்னைகளில் உடனடியாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "அரசு மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள், 2,000 தொழில்நுட்பப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு புதிதாக நியமிக்கவிருப்பது வரவேற்புக்குரியது. ரெம்டிசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ள திட்டமும் வரவேற்புக்குரியது.

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. நாள்தோறும் புதிய படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. நோயாளிகள், படுக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் கடும் பணிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்திட வேண்டும். போர்க்கால அடிப்படையில் பணி நியமனங்களை செய்திட வேண்டும்.

ஏற்கனவே எம்.ஆர்.பி தேர்வு எழுதி முடித்து பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மீதமுள்ள மருத்துவர்களுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும். மேலும் படித்து முடித்து வேலைக்காக ஏறத்தாழ 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை மாத ஊதியம் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து நியமிக்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களையும் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களை பணி அமர்த்திய பிறகும் தேவை எழும் நிலையில், மருத்துவ மாணவர்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல் செவிலியர்களையும் ஊழியர்களையும் நியமிக்க வேண்டும்.

கரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் சிலருக்கு கடந்த 4 முதல் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் இன்றியே உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.

பல மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் காலதாமதமாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியம் வழங்கிட இரண்டு, மூன்று மாதங்கள் வரை காலதாமதமாகிறது. இதனால், செலவுகளுக்கு பணம் இல்லாமல் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.

மருத்துவப் படுக்கைகள் பற்றாக்குறையை போக்கிட உடனடியாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து படுக்கை வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நூறு படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளையும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா அல்லாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டீசிவிர் உள்ளிட்ட மருந்துகளின் தட்டுப்பாட்டையும், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டையும் போக்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்புக்குரியது. அதை விரைவுபடுத்த வேண்டும். இப்பிரச்னைகளில் உடனடியாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.