ETV Bharat / city

'குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ரஜினிகாந்த் சிந்தித்துப் பேச வேண்டும்' - ஸ்டாலின்

author img

By

Published : Feb 6, 2020, 2:41 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அச்சட்டம் பற்றி ரஜினிகாந்த் ஆராய்ந்து, சிந்தித்துப் பேச வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

dmk
dmk

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்துக் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கமளித்தார். பின்னர், அவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்தையும் பெற்றார்.

மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்
மு.க. ஸ்டாலின் பொதுமக்களைs சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.க. ஸ்டாலின், ”மாணவர்கள் ஆராய்ந்து, சிந்தித்துப் போராட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். முதலில் ரஜினிகாந்த் இந்த சட்டத்திருத்தத்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ந்து, சிந்தித்துப் பதிலளித்திருக்க வேண்டும். இச்சட்டத்தினால் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால், ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றிச் சொல்லுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் பற்றி ரஜினிகாந்த் சிந்தித்து பேச வேண்டும் - ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்' - ரஜினிகாந்த்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்துக் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கமளித்தார். பின்னர், அவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்தையும் பெற்றார்.

மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்
மு.க. ஸ்டாலின் பொதுமக்களைs சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.க. ஸ்டாலின், ”மாணவர்கள் ஆராய்ந்து, சிந்தித்துப் போராட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். முதலில் ரஜினிகாந்த் இந்த சட்டத்திருத்தத்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ந்து, சிந்தித்துப் பதிலளித்திருக்க வேண்டும். இச்சட்டத்தினால் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால், ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றிச் சொல்லுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் பற்றி ரஜினிகாந்த் சிந்தித்து பேச வேண்டும் - ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்' - ரஜினிகாந்த்

Intro:Body:குடியுரிமை சட்டம் பற்றி ஆய்ந்து, சிந்தித்து ரஜினிகாந்த் பேச வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.

குடியுரிமை சட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் குடியுரிமை சட்டம் பற்றி ரஜினிகாந்த் ஆய்ந்து, ஆராய்ந்து, சிந்தித்து பேச வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவளம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் போராடும் மாணவர்கள் பற்றி ரஜினிகாந்த் கருத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் மாணவர்கள் ஆராய்ந்து,சிந்தித்து ஆய்ந்து போராட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருப்பது முதலில் அவர் இந்த சட்டத்திருத்த்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்ந்து,ஆராய்ந்து, சிந்தித்து பதில் அளித்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர் அப்படி இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால் ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றிக் சொல்லுவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதய வர்மன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.