ETV Bharat / city

‘ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரிய விசிக மனுவை ஏற்க முடியாது’ - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Sep 28, 2022, 3:50 PM IST

Updated : Sep 28, 2022, 7:41 PM IST

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொடர்ந்த வழக்கு, குற்றவியல் நடைமுறை சார்ந்த வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Etv Bharatஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு  தடை கோரிய  விசிக மனுவை ஏற்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
Etv Bharatஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரிய விசிக மனுவை ஏற்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது.

விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத, அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா? ஆதரவளராக சித்தரிக்க முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது என்பதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கூடாது” என கூறப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ? அல்லது எதிர் மனுதாரராகவோ? இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: இந்நிலையில், தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மேல் முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொடர்ந்த வழக்கு குற்றவியல் நடைமுறை சார்ந்த வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிரான திருமாவளவன் மனு... நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு...

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது.

விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத, அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா? ஆதரவளராக சித்தரிக்க முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது என்பதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கூடாது” என கூறப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ? அல்லது எதிர் மனுதாரராகவோ? இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: இந்நிலையில், தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மேல் முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொடர்ந்த வழக்கு குற்றவியல் நடைமுறை சார்ந்த வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிரான திருமாவளவன் மனு... நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு...

Last Updated : Sep 28, 2022, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.