ETV Bharat / city

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 8,35,525 பேர் தேர்வு எழுதுகின்றனர்

author img

By

Published : Feb 27, 2020, 8:36 PM IST

சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8,35,525 பேர் எழுத உள்ளதாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

students
students

இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2019-2020ஆம் கல்வியாண்டிற்கான மார்ச் 2020, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் இரண்டு தொடங்கி 24ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ள இத்தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,276 பேரும், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 19,166 பேரும் எழுதவுள்ளனர்.

இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் உட்பட, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,54,367 பேருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்காக சுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புழல் சிறையில் தேர்வு

வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும்

புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.

மாற்றுத்திறனாளி தேர்வர்கள்

3,330 மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உட்பட சலுகைகள் அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மைய ஏற்பாடுகள்

  • தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 4000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தேர்வர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.

தேர்வுக்கட்டுபாட்டு அறை அமைத்தல்

பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க,

முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை, 9385494105 , 9385494115, 9385494120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி!

இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2019-2020ஆம் கல்வியாண்டிற்கான மார்ச் 2020, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் இரண்டு தொடங்கி 24ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ள இத்தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,276 பேரும், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 19,166 பேரும் எழுதவுள்ளனர்.

இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் உட்பட, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,54,367 பேருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்காக சுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புழல் சிறையில் தேர்வு

வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும்

புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.

மாற்றுத்திறனாளி தேர்வர்கள்

3,330 மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உட்பட சலுகைகள் அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மைய ஏற்பாடுகள்

  • தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 4000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தேர்வர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.

தேர்வுக்கட்டுபாட்டு அறை அமைத்தல்

பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க,

முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை, 9385494105 , 9385494115, 9385494120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.