ETV Bharat / city

திரை பிரபலங்களால் அரசின் வருவாய் பாதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் - இயக்குநர் ஷங்கர் சொகுசு கார் வழக்கு

சென்னை: திரை பிரபலங்கள் வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரி செலுத்தாமல் பதிவு செய்வதால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

hc
author img

By

Published : Sep 13, 2019, 8:58 AM IST

இங்கிலாந்திலிருந்து வாங்கிவந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்ய கே.கே. நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிடக்கோரி திரைப்பட இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். காருக்கு ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்தியும், நுழைவு வரி செலுத்தி தடையில்லாச் சான்று பெற்றால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என வட்டார போக்குவரத்து அலுலர் மறுத்துவிட்டதாக மனுவில் கூறியிருந்தார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றமும், கேரள உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல் கட்டமாக 15 விழுக்காடு நுழைவு வரியை செலுத்தி, காரை பதிவு செய்துகொள்ள இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 44 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டியுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் ஆறு லட்சத்து 70 ஆயிரம் செலுத்தி தனது காரை பதிவு செய்துள்ளதாகவும், இதுபோல பல திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரியும் செலுத்தாமல் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுவதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

இங்கிலாந்திலிருந்து வாங்கிவந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்ய கே.கே. நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிடக்கோரி திரைப்பட இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். காருக்கு ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்தியும், நுழைவு வரி செலுத்தி தடையில்லாச் சான்று பெற்றால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என வட்டார போக்குவரத்து அலுலர் மறுத்துவிட்டதாக மனுவில் கூறியிருந்தார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றமும், கேரள உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல் கட்டமாக 15 விழுக்காடு நுழைவு வரியை செலுத்தி, காரை பதிவு செய்துகொள்ள இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 44 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டியுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் ஆறு லட்சத்து 70 ஆயிரம் செலுத்தி தனது காரை பதிவு செய்துள்ளதாகவும், இதுபோல பல திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரியும் செலுத்தாமல் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுவதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Intro:Body:திரை பிரபலங்கள் வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரியும் செலுத்தாமல் பதிவு செய்வதால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்து வாங்கி வந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்ய கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிடக் கோரி திரைப்பட இயக்குனர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். காருக்கு ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்தியும், நுழைவு வரி செலுத்தி தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என ஆர்.டி.ஓ. மறுத்து விட்டதாக மனுவில் கூறியிருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்த தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றமும், கேரளா உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல் கட்டமாக 15 சதவீத நுழைவு வரியை செலுத்தி, காரை பதிவு செய்து கொள்ள இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 44 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டியுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் 6 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தி தனது காரை பதிவு செய்துள்ளதாகவும், இதுபோல பல திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரியும் செலுத்தாமல் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுவதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளை நீதிபதி தள்ளிவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.