ETV Bharat / city

பீட்ஸா, பர்கரால் குழந்தைகளுக்கு நீரிழிவு! அதிர்ச்சித் தகவல் - Dr. Shantharam

சென்னை: பீட்ஸா, பர்கர் சாப்பிடுவதால் நீரிழிவு வருகிறது என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், நீரிழிவு வல்லுநருமான மருத்துவர் சாந்தாராம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சாந்தாராம்
author img

By

Published : Jul 20, 2019, 5:11 PM IST


சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நீரிழிவு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், நீரிழிவு வல்லுநருமான சாந்தாராம் தொடங்கிவைத்தார்.

பீட்ஸா, பர்கர் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நீரிழிவு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும்போது, "சில வருடங்களுக்கு முன்பு 40, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது 30 வயதிற்கு உட்பட்டவர்களும் பள்ளி மாணவர்களும் நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர்.

உடல் பருமன் அதிகளவில் இருப்பதாலும், தற்பொழுது மாறியுள்ள உணவு பழக்கவழக்கத்தாலும் குழந்தைகளுக்குகூட நீரிழிவு ஏற்படுகிறது. பாரம்பரிய உணவு பழக்கத்திலிருந்து மாறி பீட்சா, பர்கர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதும் இதற்கு முக்கியக் காரணம்.

அதேபோல் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும், குழந்தைகளை படிக்கச் சொல்லி பெற்றோர்கள் அளிக்கும் மன அழுத்தமும் நீரிழிவு வருவதற்குக் காரணமாக அமைகிறது" என அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.


சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நீரிழிவு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், நீரிழிவு வல்லுநருமான சாந்தாராம் தொடங்கிவைத்தார்.

பீட்ஸா, பர்கர் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நீரிழிவு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும்போது, "சில வருடங்களுக்கு முன்பு 40, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது 30 வயதிற்கு உட்பட்டவர்களும் பள்ளி மாணவர்களும் நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர்.

உடல் பருமன் அதிகளவில் இருப்பதாலும், தற்பொழுது மாறியுள்ள உணவு பழக்கவழக்கத்தாலும் குழந்தைகளுக்குகூட நீரிழிவு ஏற்படுகிறது. பாரம்பரிய உணவு பழக்கத்திலிருந்து மாறி பீட்சா, பர்கர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதும் இதற்கு முக்கியக் காரணம்.

அதேபோல் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும், குழந்தைகளை படிக்கச் சொல்லி பெற்றோர்கள் அளிக்கும் மன அழுத்தமும் நீரிழிவு வருவதற்குக் காரணமாக அமைகிறது" என அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.

Intro:சர்க்கரை நோய் விழிப்புணர்வு
பள்ளி பாட புத்தக அட்டையில் வெளியிட கோரிக்கைBody:சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நீரிழிவு விழிப்புணர்வு கருத்தரங்கில் இப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் நீரிழிவு நோய் துறை வல்லுனருமான சாந்தாராம் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். இன்சுலின் சார்ந்த வகைகளில் உடனடியாக நோயின் தாக்கம் தெரியும். இன்சுலின் சாராத வகைகளில் நோயின் அறிகுறி உடனடியாகத் தெரியாது. இதனை பரிசோதித்தால் தான் தெரியவரும்.
முன்பு சர்க்கரை நோய் 40, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வந்தது. ஆனால் தற்பொழுது 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிக அளவில் இருப்பதாகும். மேலும் தற்பொழுது மாறியுள்ள உணவு பழக்கவழக்கமும் முக்கிய காரணமாகும். பாரம்பரிய உணவு பழக்கத்தில் இருந்து மாதிரி பீட்சா பர்கர் போன்ற பொருட்களை சாப்பிடுவதும் இதற்கு காரணமாகும்.

அதேபோல் மாணவர்களுக்கு தற்பொழுது பள்ளியிலும் வெளியிலும் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகும்.

அடுத்ததாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் காரணமாக அமைகிறது. பக்கத்தில் உள்ள மாணவர்கள் படிக்கிறார்,நீயும் படிக்க வேண்டும் என பெற்றோர்கள் அளிக்கும் மன அழுத்தமும் இதுபோன்ற சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.

இளம் வயதில் சர்க்கரை நோய் வந்தால் அவர்களின் பணி பாதிக்கப்படும். சர்க்கரை நோய் படுவதால் மாதம் அவர்களுக்கு 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் முறை ஆரம்பநிலை சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. அதுவே சிகிச்சைக்கு ஏற்ப அதற்குரிய கட்டணம் அதிகரிக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே ஆகும். சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள் குறித்தும் அதன் பின்னர் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது. அதற்கான விழிப்புணர்வினை தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் துவக்கி உள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தலைமையில் சர்க்கரை நோயினை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த தகவல்களை வெளியிட வேண்டும்.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரை நோயினை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடப்புத்தகத்தின் அட்டையில் போட்டு அளிக்கலாம்.
பள்ளி மாணவர்களும் மூலம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் சென்றடைந்து சர்க்கரை நோய் கட்டுப்படுத்த உதவியாக அமையும். பள்ளி மாணவர்கள் மூலம் பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அது பெருமளவில் பயனளிக்கும்.

சர்க்கரை நோயினை முற்றிலும் குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை. ஏறிய சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்து உள்ளது.
சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள நல்ல உடற்பயிற்சி செய்தல், தினமும் 5 மணி நேரம் தூங்குதல், மன அழுத்தம் இன்றி இருத்தல்,, மெதுவாக சாப்பிடுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.






Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.