ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பெல்ஜியம் மெலினோஸ் நாய்களை சேர்க்க முடிவு

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய பெல்ஜியம் மெலினோஸ் இனத்தை சோ்ந்த 2 மோப்ப நாய்கள் வரும் டிசம்பரில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 31, 2022, 10:31 PM IST

"பெல்ஜியம் மெலினோஸ்" நாய்களை சேர்க்க முடிவு
"பெல்ஜியம் மெலினோஸ்" நாய்களை சேர்க்க முடிவு

சென்னை: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் தங்களுக்கு உதவும் வகையில் மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனா்.

வெடி மருந்துகள், வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய் பிரிவில் புதிய வரவாக பெல்ஜியம் நாட்டின் பெல்ஜியம் மெலினோஸ் இனத்தைச் சேர்ந்த 2 நாய்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டுகளை கண்டுப்பிடிக்க "பெல்ஜியம் மெலினோஸ்" நாய்களை சேர்க்க முடிவு

இந்த வகை நாய்கள் சர்வதேச அளவில் மோப்ப சக்தியில் சிறந்து விளங்கக் கூடியவை. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் நமது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பைரவா மற்றும் வீரா என்று இந்த மோப்ப நாய்குட்டிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த நாய்கள் தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளிக்கு ஆறு மாதப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அங்கு வெடிபொருட்கள், வெடிகுண்டுகள், வெடி மருந்துகளை கண்டறியும் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மோப்ப பயிற்சியில் சிறப்பாக செயல்படுவதாக பயிற்சி வழங்குவோர் தெரிவித்துள்ளனர். 2 நாய் குட்டிகளான பைரவா, வீரா வரும் நவம்பர் இறுதியில் 6 மாதகால பயிற்சியை நிறைவு செய்கின்றன.

அதன் பின்பு வரும் டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் பைரவா, வீரா சென்னை விமான நிலையத்தில் தங்களது பணியை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்த வேண்டும்... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

சென்னை: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் தங்களுக்கு உதவும் வகையில் மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனா்.

வெடி மருந்துகள், வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய் பிரிவில் புதிய வரவாக பெல்ஜியம் நாட்டின் பெல்ஜியம் மெலினோஸ் இனத்தைச் சேர்ந்த 2 நாய்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டுகளை கண்டுப்பிடிக்க "பெல்ஜியம் மெலினோஸ்" நாய்களை சேர்க்க முடிவு

இந்த வகை நாய்கள் சர்வதேச அளவில் மோப்ப சக்தியில் சிறந்து விளங்கக் கூடியவை. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் நமது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பைரவா மற்றும் வீரா என்று இந்த மோப்ப நாய்குட்டிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த நாய்கள் தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளிக்கு ஆறு மாதப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அங்கு வெடிபொருட்கள், வெடிகுண்டுகள், வெடி மருந்துகளை கண்டறியும் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மோப்ப பயிற்சியில் சிறப்பாக செயல்படுவதாக பயிற்சி வழங்குவோர் தெரிவித்துள்ளனர். 2 நாய் குட்டிகளான பைரவா, வீரா வரும் நவம்பர் இறுதியில் 6 மாதகால பயிற்சியை நிறைவு செய்கின்றன.

அதன் பின்பு வரும் டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் பைரவா, வீரா சென்னை விமான நிலையத்தில் தங்களது பணியை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்த வேண்டும்... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.