ETV Bharat / city

ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை

author img

By

Published : Jul 18, 2020, 4:54 PM IST

சென்னை: ஒரே நாளில் 12 ஆயிரத்து 259 நபர்களுக்கு கரோனா பரிசோதளை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.

கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. சென்னையில் 5 ஆயிரம் பரிசோதனை செய்யும்போது, எவ்வளவு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதோ, அதே அளவு தொற்று தான் 12 ஆயிரம் பரிசோதனை செய்யும் போதும் வருகிறது.

நேற்று (ஜூலை.17) எப்போதும் இல்லாத அளவில் 12 ஆயிரத்து 259 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1, 243 நபர்களுக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது வரைலும் 83 ஆயிரத்து 377 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அதில் 80 விழுக்காடு ( 67 ஆயிரத்து 77 நபர்கள் ) மக்கள் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மீதமுள்ள 14 ஆயிரத்து 923 நபர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைத்தவர்களின் மண்டல வாரியாக பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ராயபுரம் - 8 ஆயிரத்து 766 பேர்

திரு.வி.க. நகர் - 5 ஆயிரத்து 485 பேர்

வளசரவாக்கம் - 3 ஆயிரத்து 341 பேர்

தண்டையார்பேட்டை - 7 ஆயிரத்து 625 பேர்

தேனாம்பேட்டை - 7 ஆயிரத்து 582 பேர்

அம்பத்தூர் - 3 ஆயிரத்து 177 பேர்

கோடம்பாக்கம் - 7 ஆயிரத்து 172 பேர்

திருவொற்றியூர் - 2 ஆயிரத்து 540 பேர்

அடையாறு - 4 ஆயிரத்து 318 பேர்

அண்ணா நகர் - 7 ஆயிரத்து 693 பேர்

மாதவரம் - 2 ஆயிரத்து 184 பேர்

மணலி - 1, 277 பேர்

சோழிங்கநல்லூர் - 1, 471 பேர்

பெருங்குடி - 1, 788 பேர்

ஆலந்தூர் - 1, 882 பேர்.

மேலும் 1, 376 நபர்கள் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.

கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. சென்னையில் 5 ஆயிரம் பரிசோதனை செய்யும்போது, எவ்வளவு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதோ, அதே அளவு தொற்று தான் 12 ஆயிரம் பரிசோதனை செய்யும் போதும் வருகிறது.

நேற்று (ஜூலை.17) எப்போதும் இல்லாத அளவில் 12 ஆயிரத்து 259 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1, 243 நபர்களுக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது வரைலும் 83 ஆயிரத்து 377 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அதில் 80 விழுக்காடு ( 67 ஆயிரத்து 77 நபர்கள் ) மக்கள் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மீதமுள்ள 14 ஆயிரத்து 923 நபர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைத்தவர்களின் மண்டல வாரியாக பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ராயபுரம் - 8 ஆயிரத்து 766 பேர்

திரு.வி.க. நகர் - 5 ஆயிரத்து 485 பேர்

வளசரவாக்கம் - 3 ஆயிரத்து 341 பேர்

தண்டையார்பேட்டை - 7 ஆயிரத்து 625 பேர்

தேனாம்பேட்டை - 7 ஆயிரத்து 582 பேர்

அம்பத்தூர் - 3 ஆயிரத்து 177 பேர்

கோடம்பாக்கம் - 7 ஆயிரத்து 172 பேர்

திருவொற்றியூர் - 2 ஆயிரத்து 540 பேர்

அடையாறு - 4 ஆயிரத்து 318 பேர்

அண்ணா நகர் - 7 ஆயிரத்து 693 பேர்

மாதவரம் - 2 ஆயிரத்து 184 பேர்

மணலி - 1, 277 பேர்

சோழிங்கநல்லூர் - 1, 471 பேர்

பெருங்குடி - 1, 788 பேர்

ஆலந்தூர் - 1, 882 பேர்.

மேலும் 1, 376 நபர்கள் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.