ETV Bharat / city

சங்கர் நகர் காவல் நிலையத்தில் அதிகரிக்கும் கரோனா: காவலர்கள் அச்சம் - சங்கர் நகர் காவல் நிலையம்

சென்னை: சங்கர் நகர் காவல் நிலையத்தில் மேலும் நான்கு காவலர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.

nagar
nagar
author img

By

Published : Jun 15, 2020, 12:25 PM IST

சென்னையைப் போலவே, அண்டை மாவட்டமான செங்கல்பட்டிலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர் ஒருவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால், அவர் கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டார்.

முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் சங்கர் நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், அங்குள்ள மற்ற காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து, பரிசோதனை முடிவில் மேலும் நான்கு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தனிமைப்படுத்துதல் மையத்தில் ஒருவர் உயிரிழப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னையைப் போலவே, அண்டை மாவட்டமான செங்கல்பட்டிலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர் ஒருவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால், அவர் கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டார்.

முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் சங்கர் நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், அங்குள்ள மற்ற காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து, பரிசோதனை முடிவில் மேலும் நான்கு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தனிமைப்படுத்துதல் மையத்தில் ஒருவர் உயிரிழப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.