ETV Bharat / city

தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்: சுகாதாரத் துறை விரிவான அறிக்கை

author img

By

Published : Apr 21, 2020, 8:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

corona
corona

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 87,159 பேர் முடித்துள்ளனர்.

தற்போது ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 972 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 145 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனி வார்டில் ஆயிரத்து 917 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

53 ஆயிரத்து 45 பேரின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 1,596 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,582 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆயிரத்து 990 நபர்களின் ரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. 5,877 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 635 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று வரை 1,520 பேருக்கும், இன்று 76 பேருக்கும் என 1,596 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 17 பேர் இறந்துள்ளனர். இன்று ஒருவர் என 18 பேர் இறந்துள்ளனர். மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்டிலேட்டர் 3,371ம், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று பேருக்கும், சென்னை மாவட்டத்தில் 55 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 35 மாவட்டங்களின் நிலவரம்:

  • சென்னை மாவட்டம் - 358
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 134
  • திருப்பூர் மாவட்டம் - 109
  • திண்டுக்கல் மாவட்டம் - 76
  • ஈரோடு மாவட்டம் - 70
  • திருநெல்வேலி மாவட்டம் - 62
  • செங்கல்பட்டு மாவட்டம் - 56
  • நாமக்கல் மாவட்டம் - 51
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 50
  • தஞ்சாவூர் மாவட்டம் - 49
  • திருவள்ளூர் மாவட்டம் - 48
  • மதுரை மாவட்டம் - 46
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 44
  • தேனி மாவட்டம் - 43
  • கரூர் மாவட்டம் - 42
  • விழுப்புரம் மாவட்டம் - 40
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 39
  • தென்காசி மாவட்டம் - 31
  • திருவாரூர் மாவட்டம் - 28
  • தூத்துக்குடி மாவட்டம் - 27
  • கடலூர் மாவட்டம் - 26
  • சேலம் மாவட்டம் - 24
  • வேலூர் மாவட்டம் - 22
  • விருதுநகர் மாவட்டம் - 19
  • திருப்பத்தூர் மாவட்டம் - 17
  • கன்னியாகுமரி மாவட்டம் - 16
  • திருவண்ணாமலை மாவட்டம் - 12
  • சிவகங்கை மாவட்டம் - 12
  • ராமநாதபுரம் மாவட்டம் - 11
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 10
  • நீலகிரி மாவட்டம் - 9
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 5
  • பெரம்பலூர் மாவட்டம் - 5
  • அரியலூர் மாவட்டம் - 4
  • புதுக்கோட்டை மாவட்டம் - 1

மேலும் இன்று 178 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 87,159 பேர் முடித்துள்ளனர்.

தற்போது ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 972 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 145 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனி வார்டில் ஆயிரத்து 917 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

53 ஆயிரத்து 45 பேரின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 1,596 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,582 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆயிரத்து 990 நபர்களின் ரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. 5,877 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 635 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று வரை 1,520 பேருக்கும், இன்று 76 பேருக்கும் என 1,596 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 17 பேர் இறந்துள்ளனர். இன்று ஒருவர் என 18 பேர் இறந்துள்ளனர். மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்டிலேட்டர் 3,371ம், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று பேருக்கும், சென்னை மாவட்டத்தில் 55 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 35 மாவட்டங்களின் நிலவரம்:

  • சென்னை மாவட்டம் - 358
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 134
  • திருப்பூர் மாவட்டம் - 109
  • திண்டுக்கல் மாவட்டம் - 76
  • ஈரோடு மாவட்டம் - 70
  • திருநெல்வேலி மாவட்டம் - 62
  • செங்கல்பட்டு மாவட்டம் - 56
  • நாமக்கல் மாவட்டம் - 51
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 50
  • தஞ்சாவூர் மாவட்டம் - 49
  • திருவள்ளூர் மாவட்டம் - 48
  • மதுரை மாவட்டம் - 46
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 44
  • தேனி மாவட்டம் - 43
  • கரூர் மாவட்டம் - 42
  • விழுப்புரம் மாவட்டம் - 40
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 39
  • தென்காசி மாவட்டம் - 31
  • திருவாரூர் மாவட்டம் - 28
  • தூத்துக்குடி மாவட்டம் - 27
  • கடலூர் மாவட்டம் - 26
  • சேலம் மாவட்டம் - 24
  • வேலூர் மாவட்டம் - 22
  • விருதுநகர் மாவட்டம் - 19
  • திருப்பத்தூர் மாவட்டம் - 17
  • கன்னியாகுமரி மாவட்டம் - 16
  • திருவண்ணாமலை மாவட்டம் - 12
  • சிவகங்கை மாவட்டம் - 12
  • ராமநாதபுரம் மாவட்டம் - 11
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 10
  • நீலகிரி மாவட்டம் - 9
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 5
  • பெரம்பலூர் மாவட்டம் - 5
  • அரியலூர் மாவட்டம் - 4
  • புதுக்கோட்டை மாவட்டம் - 1

மேலும் இன்று 178 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.