சென்னை: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
![முதலமைச்சர் தொடங்கி வைத்தார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15917110_540_15917110_1658729492760.png)
சுமார் 200 அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிதிவண்டியை பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் அமைச்சர்கள், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன், ராஜ கண்ணப்பன், கயல்விழி மற்றும் பல அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
![முதலமைச்சர் தொடங்கி வைத்தார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-cmstalin-7209106_25072022111811_2507f_1658728091_112.jpg)
இதையும் படிங்க: பேனா வடிவில் சிலை: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்